Thursday 4 December 2014

குவைத் நாட்டில் பணிபுரிய வாய்ப்பு: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்




குவைத் நாட்டிலுள்ள இந்திய தொலைதொடர்புத் துறையில் பணிபுரிய உள்ள வாய்ப்பு குறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "குவைத் நாட்டிலுள்ள இந்திய தொலைதொடர்புத் துறையில் பணிபுரிய 50 வயதிற்குட்பட்ட குவைத் நாட்டின் கனரக மற்றும் இலகுரக வாகன நடப்பு ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் மற்றும் குவைத் ஒட்டுநர் உரிமத்தினை புதுப்பிக்கத் தவறிய ஓட்டுநர்கள் தேவைப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன், இலவச விமான டிக்கெட், இருப்பிடம் , உணவுப்படி மற்றும் குவைத் நாட்டின் சட்டதிட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும்
மேற்காணும் பணிக்கு விருப்பமும் தகுதியும் இருப்பின், தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட், ஒரு புகைப்படம் ஆகியவற்றுடன், எண்.42, ஆலந்தூர் சாலை, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியிலுள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு நேரிலோ அல்லது omcresum@gmail.com மின்னஞசல் முகவரிக்கோ உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு, 9444696724044-22502267/22505886 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும் அல்லது www.omcmanpower.comஎன்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment