Monday 25 May 2020

ரமலான் நோன்பு பெருநாள்


வெளியூர் மௌத் அறிவிப்பு 25.05 2020



*அடியக்கமங்கலம்* ராஜாத்தெரு ‘ஜமாஅத் தலைவர்’ ஜனாப் M.புர்கானுதீன் அவர்களின் மாமியாரும், கொடிக்கால்பாளையம் மர்ஹும் K.S.முஹம்மது யூசுப், மர்ஹும் ஹாஜி K.S. அப்துல் ஜப்பார் ஆகியோர்களின் சகோதரியும், மலாயா தெரு மர்ஹும் அப்துல் ரவூப் அவர்களின் மனைவியுமான ஹாஜியா *மஹ்மூதா பீவி* அவர்கள் ராஜாத்தெரு தனது மகள் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

இன்ஷாஅல்லாஹ்! அன்னாரின் ஜனாஸா நாளை *(26/05/2020)* காலை *11* மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.


Wednesday 20 May 2020

வெளியூர் மௌத் அறிவிப்பு 20.05.2020

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)      

           ....ஜனாஸாஅறிவிப்பு ....

நமதூர் அடியக்கமங்கலம் மேலச்செட்டித்தெரு முன்னாள் ஜமாஅத் துணைத்தலைவர் T.M.முஹம்மது தாஹிர் அவர்களின் மனைவியும், ’மர்ஹும்’M.T.நியமத்துல்லாஹ், M.T.பரக்கத்துல்லாஹ்,M.T.ஜெஹபர் நாஜிம்,M.T.ஹாஜாஷேக் மிஸ்பாஹுதீன் ஆகியோர்களின் தாயாருமான ஹைருன் பரீயா அவர்கள் மேலச்செட்டித்தெரு மஸ்தான் காலணியிலுள்ள தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!

அன்னாரின் ஜனாஸா (20/05/2020) காலை10:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். இன்ஷாஅல்லாஹ்!

Monday 18 May 2020

வெளியூர் மௌத் அறிவிப்பு 17.05.20 (செய்யது முஹைதீன்)

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)        


           ....ஜனாஸாஅறிவிப்பு ....

நமதூர் அடியக்கமங்கலம் ஜலாலாலியாத்தெரு ‘மர்ஹும்’M.செய்யது முபாரக் அவர்களின் மகனும்,M.முஹம்மது இத்ரீஸ்,M.முஹம்மது குத்புதீன் ஆகியோர்களின் மருமகனும்,S.நிஜாமுதீன்,S.ஜலாலுதீன் ஆகியோர்களின் சகோதரருமான S.செய்யது முஹைதீன் அவர்கள் ஜலாலியாத்தெரு தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!

அன்னாரின் ஜனாஸா இன்று(17/05/2020)காலை10:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். இன்ஷாஅல்லாஹ்!

இஸ்லாமிய நண்பர்கள் கவனத்துக்கு

.

இடதுசாரிகள், பெரியாரிஸ்டுகள், பகுத்தறிவாளர்கள், இந்து மதத்தையும், பிஜேபியையும், சங்கிகளையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்றால், இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று பொருளல்ல.   இந்து மதத்தை கூடுதலாக விமர்சனம் செய்வதற்கு காரணம், அது பெரும்பான்மை மதமாக இருப்பதும், அதில் உள்ள சாதிய ஒடுக்குமுறையுமே.   மேலும், இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும், சிறுபான்மையினராக இருப்பதாலும், அவர்கள் ஏற்கனவே பெரும்பான்மையாக உள்ள  மதவெறி பிடித்த சங்கிகளால் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுவதாலும், சிறுபான்மையினருக்கு ஆதரவாக நிற்பது எங்கள் கடமை என்று  என்னைப் போன்றவர்கள் கருதுகிறோம்.  

இஸ்லாதத்தில், பிற மதங்களைப் போலவே, கண்டிக்கப்பட வேண்டிய ஏராளமான மூடநம்பிக்கைகள் உள்ளன.   பெண்களுக்கு புர்கா கட்டாயம், பன்றி இறைச்சி உண்ணாதது, சொர்க்கத்தில் ஏழு எழுபது கன்னிகள், என ஏராளமான விஷயங்கள் விவாதிக்க உண்டு.  

அனைத்து கடவுள்களும், அனைத்து மதங்களும் மனிதனின் படைப்பே என்பதை என்னைப் போன்றவர்கள்  உறுதியாக நம்புகிறோம்.  அதனால், இந்து மதம் உள்ளிட்ட அனைத்து மதங்களின் மீதும் நாங்கள் வைத்திருக்கும் மரியாதைதான் இஸ்லாம் மதத்துக்கும் = எந்த மரியாதையும் இல்லை.

பிஜேபி, மோடி, இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் பதிவுகளில் பாய்ந்து சென்று கருத்து பதிவு செய்யும் பல இஸ்லாமியர்கள்,  இஸ்லாத்தை பற்றி பேசினாலே, சுயசிந்தனையை இழந்து அரற்றுவதை காண முடிகிறது.  மிக மிக சகிப்புத்தன்மை குறைவான மதம் இஸ்லாம் என்று நான் வெளிப்படையாகவே குற்றம் சுமத்துகிறேன்.   ப்ரான்சு நாட்டில் நடந்த சார்லி ஹெப்டோ படுகொலைகள் முதல், இந்தியாவில் நடந்த பல்வேறு தீவிரவாத சம்பவங்களை என்னால் உதாரணமாக கூற முடியும்.

பிற மதங்களில் உள்ளது போல இஸ்லாத்தில் ஏன் நாத்தீகர்கள் அதிக அளவில் இல்லை என்பதை யோசித்திருக்கிறீர்களா ?  ஏனெனில் வெளிப்படையாக நாத்தீகம் பேசிய தோழன் பாரூக்கின் கொலைதான் அதற்கு காரணம்.  முகநூலில் நாத்தீகம் பேசிய சில இஸ்லாமியர்களுக்கு அவர்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு, உளவுத் துறை அவர்களை அழைத்து, எழுதுவதை நிறுத்தச் சொன்ன சம்பவங்களை நான் அறிவேன்.  

அதனால் இஸ்லாத்தை விமர்சித்து எழுதினால், பதிவில் வந்து, “உங்களிடம் நான் இதை எதிர்ப்பார்க்கவில்லை”, “இது போன்ற பதிவுகளை தவிர்க்கலாமே”, “உங்கள் நன்மதிப்பை இழக்கிறீர்கள்”, “உங்களை நல்லவர் என்று நினைத்து ஏமாந்து விட்டேன்”, “உன்னைப் போய் சீ ஃபர்ஸ்ட் லிஸ்டில் வைத்திருந்தேன்”,  “உன் பதிவுக்கெல்லாம் முதலில் வந்து லைக் போட்டேனே” "நீ ஒரு ஆர்.எஸ்.எஸ் ஸ்லீப்பர் செல்" என்பது போன்ற இலவச அட்வைஸ்கள் முதல், “இது போன்ற பதிவுகளை நிறுத்திக் கொள்வது நல்லது”,  “ஐடி தூக்கப்படும்” “ஃபத்வா” போன்ற மிரட்டல்கள் விடும் வேலைகளுக்கு எந்த பலனும் இருக்காது.

அனைத்து மதங்களும் என்னைப் போன்றவர்களுக்கு ஒன்றுதான் = கட்டுக்கதைகளின் தொகுப்பு.

ஆகையால் வெட்டியாக நேரத்தை வீணாக்காமல், அப்படியே யு டர்ன் போட்டு கிளம்புங்கள்.   நான் எழுதுவது, எனது மகிழ்ச்சிக்காக.  அதை தொடர்ந்து செய்வேன்.

ஊரடங்கு மே 31 வரை நீடிப்பு


Sunday 10 May 2020

மருத்துவமனையில் மன்மோகன் சிங்’

#BREAKING | ‘

நெஞ்சு வலி காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி!

#ManmohanSingh #Congress #Delhi #AIIMS

கொடிக்கால்பாளையம்


Saturday 9 May 2020

பாபர் மசூதி வழக்கு: ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்க உத்தரவு

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விசாரணையை முடித்து வைத்து தீர்ப்பை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வழங்குமாறு லக்னோ சிறப்பு நீதிமன்றமன்றதுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தேசிய அளவில் பொதுமுடக்கம் நடைமுறையில் இருப்பதால் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு காலக்கெடுவை சுப்ரீம் கோர்ட்டு நீட்டித்திருக்கிறது. 

பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் வெடித்த கலவரத்தால் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பா.ஜனதா மூத்த தலைவர்களானஎல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தரபிரதேச முதல்வர் கல்யாண்சிங், வினய் கத்தியார், விஹெச்வி தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பை இந்த ஆண்டு ஏப்ரல் இறுதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. 

ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்புகள் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் மேலும் தாமதம் ஏற்பட்டதால் வழக்கின் காலக்கெடுவை நீட்டிக்க சிறப்பு நீதிமன்றம் சார்பில் அனுமதி கோரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளான ஆர் எப் நாரிமன், சூர்ய காந்த் ஆகியோர் முன்னிலையி்ல் காணொலியில் இன்று நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், “ பாபர் மசூதி வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம் காலக்கெடுவை நீட்டிக்க எழுதிய கடிதம் கடந்த 6-ம் தேதி கிடைத்தது. நீதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கிட காலக்கெடுவை நீட்டிக்கிறோம். சாட்சியங்களை உறுதி செய்யவும், விசாரிக்கவும் தேவைப்பட்டால் நீதிபதி யாதவ், காணொலிமுறையை பயன்படுத்திக்கொள்ளலாம். விசாரணை அனைத்தும் ஏறக்குறைய முடியும் நிலைக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள்ளாக அனைத்து விசாரணைகளையும் முடித்து தீர்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தனர்