Wednesday 29 June 2022

வெளிநாட்டு மௌத் அறிவிப்பு*

 * 29 June 2022 


 கொடிக்கால்பாளையம் நடுத்தெரு மர்ஹும் செ.மு. முஹம்மது நத்தர் ஜூலைஹா பீவி அவர்களின் மகளும், திருவாரூர் பள்ளிவாசல் தெரு சாந்தடிச்ச வீட்டு மர்ஹும் K S அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹும் யூசுப் தாஜுதீன், அப்துல் ஹமீத், அஹமது ஜலீல், மர்ஹும் கலீலுர்ரஹ்மான், முஹம்மது ஷாஃபி அவர்களின் சகோதரியும், முஹம்மது மாலிக் அவர்களின் தாயாரும், ஹபீப் முஹம்மது அவர்களின் மாமியாரும் ஆகிய *பேபி என்கிற மும்தாஜ் பேகம்* அவர்கள் சிங்கப்பூரில் மௌத். 


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன். 


 அனாரின் ஜனாஸா தொழுகை சிங்கப்பூரில் இன்ஷா அல்லாஹ் காலை 11:30 க்கு நடைபெறும்.

Monday 20 June 2022

கொடிக்கால்பாளையம்


 நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் ஜமாஅத் ஜே.சி.பி முலமாக சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Thursday 16 June 2022

 ஜனாஸா அறிவிப்பு


 •• 



 நமதூர் பட்டக்கால் தெரு ‘கோட்டூரார்வீட்டு’ (மர்ஹூம்) அப்துல் ஹமீது அவர்களின் மகனும், A. பகுருதீன், A. தாஜுதீன் இவர்களின் சகோதரரும், H. முகம்மது அஸ்பர்தீன் அவர்களின் தகப்பனாரும், அமான் தாயக அலுவலக பொறுப்பாளருமான, A. ஹாஜா முகம்மது நத்தர் அவர்கள் நடுத்தெரு தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். 


 இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!

Wednesday 15 June 2022

நகராட்சி துவக்க பள்ளி பேரணி

திருவாரூர் கொடிக்கால்பாளையம் நகராட்சி துவக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி இன்று நடைப்பெற்றது. இதில் நகரமன்ற உறுப்பினர் ஷகீலா பானு பாஷா ,தலைமை ஆசிரியை சசிகலா மற்றும் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.



Tuesday 14 June 2022

மௌத் அறிவிப்பு

 14.06.2022



 நமதூர் பள்ளிக்கூடத்திடல் தெரு மர்ஹூம் ஹசன் மரைக்காயர் அவர்களின் மகனாரும் மர்ஹூம் முஹம்மது சுல்தான் மரைக்காயர் அவர்களின் மைத்துனரும் முஹம்மது மீரான் அஹமது ரிபாய் அவர்களின் தாய்மாமாவும் ,அஹமதுலாபீர் அவர்களின் தகப்பனாருமான ஹாஜி. முஹம்மது இமாம் மரைக்காயர் அவர்கள் தனது இல்லத்தில் மௌத். 

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Saturday 11 June 2022

குடியிருப்பு வளாகம் ஒப்படைப்பு நிகழ்ச்சி

 








நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர்உறவின்முறை ஜமாஅத் பணியாளர்கள் குடியிருப்பு வளாகம் இமாம்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை 7:30 மணிக்கு மௌலீது மஜ்லிஸ் நடைப்பெற்றது. இதில் தலைவர் ஹாஜி. கா.மெ.மு.அ.முஹம்மது ஜபரூதீன், செயலாளர் கீ.வா.மு.அ.முஹம்மது சலாவுதீன், துணைத்தலைவர் ஹாஜி.ஏ.ஜெஹபர் சேக் அலாவுதீன், பெருளாளர் ஏ.முஹம்மது நிஷாத் அலி,ஆடிட்டர் மு.முஹம்மது சுல்தானுல் ஆரிபின்,52 ப்பணபகுதி பொருளாளர் .எ.மா.அ.அஹமது ஹூசேன், தீனா அப்பா அடினசல் டிரஸ்டி வெ.ப.மு.அ.முஹம்மது அபுபக்கர் மற்றும் பிரதிநிதிகள் , ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.