Thursday 28 July 2022

44வது செஸ் ஒலிம்பிக் போட்டி சென்னையில் துவக்குகிறது.



 

வெளியூர் மௌத் அறிவிப்பு


 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

வெளியூர் ஜனாஸா அறிவிப்பு 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 

நமதூர் வடக்கு தெரு வெங்கலம் வீட்டு மர்ஹூம் முஹம்மது அலி அவர்களின் மருமகனும் மர்ஹூம் மன்னர் அப்துல்லா அவர்களின் மச்சானுமாகிய 
 அடியக்கமங்கலம் இரயிலடித்தெரு    திண்ணைக்காரவீட்டு ஜனாப் M.சம்சுதீன் அவர்களுடைய மகனார் S.ஹாஜா அமீருதீன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

 அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்

Tuesday 26 July 2022

கொடிக்கால்பாளையம் இரட்டை ரயில் பாதை





 26.07.2022 #திருவாரூர் - #மயிலாடுதுறை இடையே மின்மயமான அகலப்பாதையில் ஏற்கனவே ரயில் போக்குவரத்து நடைப்பெற்று வருகிறது. தற்போது திருவாரூர் சந்திப்பை அடுத்து வரும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் ரயில்கள் நிறுத்தம் இல்லாமல் அடியோடு அழிக்கப்பட்ட #கொடிக்கால்பாளையம் ரயில் நிலையம் பகுதியில் 2வது அகப்பாதை பணிகள் தொடக்கமாக மண்கள் சமன்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Monday 25 July 2022

இந்திய குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவி ஏற்பு


 

மௌத் அறிவிப்பு


நமதூர் வடக்குத்தெரு மல்காம் வீட்டு மு.பதிவுல் ஜமான் அவர்களின் சம்மந்தரும் ப. முஹம்மது ஹாஜா அவர்களின் மாமனாரும் அடியக்கமங்களம் M. I. கியாசுதீன் அவர்களின் சகோதரரும் அர்ஷத் ஆரிஃப் அவர்களின் தகப்பனாருமான M. I. கன்ஜுல் மஹபூப் அவர்கள் நெடுங்குடி தனது இல்லத்தில் மௌத். அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Sunday 24 July 2022

மஹாஜன சபை கூட்டம்

 


24.07.2022 நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் மஹாஜன சபை கூட்டம் இன்று காலை மஃஸூம் மஹாலில் ஜமாஅத் தலைவர் ஹாஜி கா.மெ.மு.அ.முஹம்மது ஜபரூதீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

 இதில் மத்லபுல் கைராத் கல்வி நல குழுமத்தின் காலியாக இருந்த செயலாளர் பொறுப்புக்கு கீ.வா.மு.அ.முஹம்மது யூசுப் சாதிக் அவர்களும் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கு 

1.முஹம்மது அப்துல் வஹாப் 2.ப.இ.மு.முஹம்மது நிஜாமுதீன் 3.கு.ஜெஹபர் சாதிக் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

 மேலும் தினா அப்பா இப்ராம்சா ராவுத்தர் நினைவிடத்தில் குடியிலிருந்த பஹ்ருதீன் மனுவை ஏற்று தக்க நடவடிக்கை எடுப்பது என்றும் 

 நமதூர் புதுமனைத்தெரு நல்வழி விடுதி புதிய பள்ளிவாசல் கட்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டு விரைவில் பணிகளை துவக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 

இதில் ஜமாஅத் அங்கத்தினர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Saturday 23 July 2022

மௌத் அறிவிப்பு

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் இத்ரிஸ் மச்சான் அவர்களின் இளைய சகோதரி நூர்நிசா அவர்கள் மௌத்




Sunday 10 July 2022

மௌத் அறிவிப்பு

 *நமதூர் மெளத் அறிவிப்பு* 10.07.2022 நமதூர் பள்ளிவாசல் தெரு மர்ஹும் கோ.அ.அப்துல் காதர் அவர்களின் மகனாரும், K.A.ஹாஜா அஸனுதீன், K.A.முஹம்மது யூசுப், ஆகியோரின் சகோதரரும், A.முஹம்மது ஜுனைருதீன், J.முஹம்மது மன்சூர், ஆகியோரின் மாமனாரும், M.முஹம்மது தாஜ்பிராக்சா அவர்களின் தகப்பனாரும் ஒய்வு பெற்ற தீயணைப்பு துறை அலுவலர் K.A.M.*துல்பக்கீர்* அவர்கள் மலாயாகார்டனில் மெளத். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜானசா இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

ஹஜ்ப்பெருநாள் தொழுகை

Thursday 7 July 2022

வெளியூர் மௌத் அறிவிப்பு

 07.07.2022


 நமதூர் மலாயா தெரு பாளையத்தா வீட்டு மர்ஹூம் பத்தி இ. மு. மு. அப்துல் ஜெமீல் அவர்களின் சம்மந்தியும் மர்ஹும் S. A. M.ஹமீது சுல்தான் அவர்களின் மனைவியும் மர்ஹூம் H.சேக் அலாவுதீன் அவர்களின் தாயாருமான ஆமினா பீவி அவர்கள் ஆதலையூர் கரைப்பாக்கம் நடுத்தெரு தனது இல்லத்தில் மௌத். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் அன்னாரின் ஜனாஸா வெள்ளி கிழமை காலை 10.30 மணிக்கு ஏனங்குடி ஆதலையூரில் நல்லடக்கம் செய்யப்படும்.

Tuesday 5 July 2022

மௌத் அறிவிப்பு

கொடிக்கால் பாளையம், மேலத்தெரு, மில்லுக்கார வீட்டு மர்ஹூம் S.முஹம்மது தாவூது அவர்களின் மகனும், மர்ஹூம் M.ஜெஹபர் சாதிக், மர்ஹூம் M.அப்துல் காதர், மர்ஹூம் M.குலாம் ரசூல், மர்ஹூம் M.கைருல் ஆபிதீன் மற்றும் M.ஹாஜா முஹையதீன் அவர்களின் சகோதரரும், காடை வீட்டு முஹம்மது ரஸ்புதீன் அவர்களின் மாமனாரும், A.முஹம்மது இபுறாஹிம் பாதுஷா, A.முஹம்மது ஷாஜஹான் மற்றும் A.ஹசன் குத்தூஸ் அவர்களின் தகப்பனாரும் மேலத்தெரு ஜமாஅத் முன்னாள் நாட்டாண்மையுமான *M.அன்வர்தீன்* அவர்கள் காயிதே மில்லத் தெருவில் தனது இல்லத்தில் மௌத். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் அன்னாரின் ஜனாஸா *நாளை (06-7-2022) காலை 10 மணிக்கு நல்லடக்கம்* செய்யப்படும்.

கொடிக்கால்பாளையம்