Friday 28 February 2020

பெரிய நிலவுக்கு போட்டியாக 3 ஆண்டுகளாக பூமியை சுற்றி வரும் குட்டி நிலா!

விண்வெளியில் நிகழம் சிறு கோள்கள் குறித்து ஆய்வுகளை நிகழ்த்தி வரும் கேம்பிரிஜில் உள்ள 'மைனர் பிளானட் சென்டர்' விடுத்துள்ள செய்திகுறிப்பில்:

பூமியைச் சுற்றி வரும் புதிய  'குட்டி நிலவு' ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு, '2020 சிடி' எனப் பெயரிட்டுள்ளோம். கடந்து 3  ஆண்டுகளாக இந்தக் குட்டி நிலா பூமியை சுற்றி வந்துகொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இதைக் கண்டறியாமலேயே இருந்திருக்கிறோம். இந்த நிலவு நம்முடன் நீண்ட காலம் இருக்காது.

இது பூமியை மோதுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால், மிகவும் சிறியதாக இருப்பதால், தரையைத் தொடும் முன் வளிமண்டலத்திலேயே எரிந்து விட கூடும். இதற்கு முன்னர், 1991ம் ஆண்டு '1991 விஜி' எனப் பெயரிடப்பட்ட குட்டி கோள் ஒன்று பூமியைச் சில ஆண்டுகள் சுற்றி வந்தது. பின்னர் அது வேறு பாதையில் பூமியை விட்டு வெகு தூரம் சென்று விட்டது. அதேபோல்  2006-ம் ஆண்டு இது போன்ற ஒரு விண்கல் பூமியைச் சுற்றி வந்தது. அதன் பிறகு தன் பாதையில் சென்று விட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday 27 February 2020

டெல்லி வன்முறை: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு; பதற்றம் தணிந்தது

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மவுஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் புதிதாக போராட்டங்கள் தொடங்கின. இந்த போராட்டத்துக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் கடந்த 23-ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர்


இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது. வன்முறையாளர்கள் கடைகள், வீடுகளுக்கு தீ வைத்தும், சாலைகளில் வாகனங்கள், டயர்களை எரித்தும் வெறியாட்டம் போட்டனர்.

சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். உயிரிழப்புகளும் நிகழ்ந்தது. இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம்  வரவழைக்கப்பட்டது. மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் ‘144’தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே வன்முறையில் சிக்கி காயமடைந்தவர்களில் பலர், சிகிச்சை பலனளிக்காமல் ஆஸ்பத்திரிகளில் மரணமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்  நேற்று வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு  நேரில் சென்று பார்வையிட்டார். பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் பகிரங்க அறிக்கையை வெளியிட்டு, "அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கு" அழைப்பு விடுத்துள்ளார்

அமித்ஷா பல ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார். வன்முறை தொடர்பாக டெல்லி காவல்துறை 18 வழக்குகள்  பதிவு செய்து 106 பேரை கைது செய்துள்ளது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், பதற்றம் தணிந்து உள்ளதாகவும் போலீசார் கூறி உள்ளனர்.

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது  34 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 30 பேர் உயிரிழந்த நிலையில் வன்முறையில் படுகாயமடைந்து மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 270 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

தீயணைப்புத் துறை இயக்குநர் அதுல் கார்க் கூறும் போது,  பாதிக்கப்பட்ட பகுதிகளை மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வடகிழக்கு டெல்லியின் வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது  நாங்கள் எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளவில்லை.

வடகிழக்கு டெல்லியின் வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளிலிருந்து இன்று காலை 12 மணி முதல் காலை 8 மணி வரை 19 அழைப்புகள் வந்தன. 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் உள்ள நான்கு தீயணைப்பு நிலையங்களுக்கு கூடுதல் தீயணைப்பு வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. என கூறி உள்ளார்

Friday 21 February 2020

*நமதூர் மௌத் அறிவிப்பு 21.02.2020

*

*நமதூர்,  மேலத்தெரு "தண்ணீர் குடத்தார் வீட்டு  M.நஜுருதீன் அவர்களின் சம்மந்தரும், கூத்தூர்  S.D.A.கலீல்  ரஹ்மான் அவர்களின் தகப்பனாரும்,  கூத்தூர் ஜமாஅத் முன்னாள் தலைவருமான S.D.அப்துல் ரஷீத்* *பர்மா தெருவில் மௌத்*
*அன்னாரின் ஜனாஸா இன்று இரவு  9.00 மணிக்கு கீழத்தெருவில்  நல்லடக்கம் செய்யப்படும்.*

நமதூர் மௌத் அறிவிப்பு . 21.02.2020

*


நமதூர் மேலத்தெரு "காட்டு ராஜா" வீட்டு மர்ஹும் T.K.M.ஷேக் தாவுத் அவர்களின் மகனும்,T.K.M.முஹம்மது தமீம் அவர்களின் அண்ணன் மகனும் ஹாசிக்கின் அவர்களின் தகப்பனாருமான S.அமீருல் ஹாஜா அவர்கள்
வபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

அன்னாரின் ஜனாஸா இன்று காலை  11.00 மணிக்கு மேலத்தெருவில்  நல்லடக்கம் செய்யப்படும்.

 *21.02.2020*

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*

Thursday 20 February 2020

நமதூர் நிக்காஹ் தகவல் 20.02 2020


நமதூர் மௌத் அறிவிப்பு 20.02 2020

வடக்கு தெரு நூல்கார வீட்டு மர்ஹூம் முஹம்மது அலி அவர்களின் மனைவி சஹிதா பீவி அவர்கள் வடக்கு தெருவில் மௌத்

Wednesday 19 February 2020

#Reject_NRC_CAA : திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்


வெளியூர் மௌத் அறிவிப்பு 19.02.2020

☪ KOM NEWS ONLY 🕌
 வெளியூர் மௌத் அறிவிப்பு

நமதூர் தெற்குத்தெரு மர்ஹூம் சி.ப.அப்துல் ரெஜாக் அவர்களின் மகனாரும் மர்ஹூம். சி.ப.அ. ஹாமீது அவர்களின் சகோதரரும் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் சிறிய தந்தை யுமான சி.ப.அ. அப்துல் ரஹீம் அவர்கள் சென்னை யில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்

அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும்

19.02.2020

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*

Wednesday 12 February 2020

நமதூர் மௌத் அறிவிப்பு 12.02.2020

நமதூர் கொடிக்கால்பாளையம் ஜெயம்தெருவில் மேல வீட்டு ரஃபிக் அவர்களின் தகப்பனார் மெளத்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிவூன்

தில்லியில் மீண்டும் கெஜ்ரிவால்


Tuesday 11 February 2020

நமதூர் மௌத் அறிவிப்பு 11.02.2020

*இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்


நமதூர் மர்ஹூம் வெ.சி.மு.முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மகனாரும் வெ.சி.மு.முஹம்மது தவ்ஃபீக் அவர்களின் சகோதரரும் மு.முஹம்மது சர்புதீன் அவர்களின் மைத்துனருமான ஜெஹபர் சாதிக் மேலத்தெருவில் மௌத் .


அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11.30 மணிக்கு கீழத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்.