Thursday 31 May 2018

அஞ்சல் ஊழியர்கள் 9-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் பணிகள் பாதிப்பு

ஜி.டி.எஸ். கமிட்டி ஊழியர் ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தொழிற் சங்க உறுப்பினர் சரி பார்ப்பை உடனே வெளியிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 22-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 9-வது நாளாக நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி திருவாரூர் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சல் துறை ஊழியர் சங்க நிர்வாகி தர்மதாஸ் தலைமை தாங்கினார்.

அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் தபால் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் நடந்த போராட்டத்தினால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டன.

Saturday 26 May 2018

பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் கலெக்டர் தகவல்




திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழா வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார். அவருடன் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உடன் இருந்தார். அப்போது ஆழித்தேர் வடிவமைப்பு, ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்ட இரும்பு சக்கரம் மற்றும் தேர் சக்கர முட்டுக்கட்டை வடிவமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து தேரோடும் 4 வீதிகளிலும் தேர் சுற்றி வர தேவையான வசதிகள் உள்ளதா? என்றும், தேருக்கு இடையூறு ஏற்படாமல் மரக்கிளைகள் வெட்டப்பட்டுள்ளதா? என்றும் பார்வையிட்டனர். மேலும் சாலையின் குறுக்கே மின்சார கம்பிகள், தொலைபேசி இணைப்பு கம்பிகள் செல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கூறியதாவது.

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழா வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் வடம் பிடிக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னேற்பாடு கூட்டங்கள் நடத்தப்பட்டு அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு, விழா சிறப்பாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நகராட்சி மூலம் 50 துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேருக்கு முன்னும், பின்னும் வாகனத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தேரோடும் 4 வீதிகளிலும் 7 தற்காலிக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தேரோடும் வீதியில் 2 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார்் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொது மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மூலம் 3 அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேரோடும் வீதிகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், 2 உதவியாளர்கள் அடங்கிய 4 மருத்துவக்குழுக்களும், தேருக்கு பின்னால் 2 மருத்துவக்குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆழித்தேரோட்டத்திற்கு 1 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்டம் சிறப்பாக நடைபெற மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Friday 25 May 2018

கொடிக்கால்பாளையம் நோன்பு நேரம்

🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
*கொடிக்கால்பாளையம் நோன்பு கால நேரங்கள்*
🌙🌙🌙🌙🌙🌙🌙
பிறை 9 (25/05/2018) வெள்ளிக்கிழமை
🕌🕌🕌🕌🕌🕌
ஸஹர் முடிவு 4:08
சுபுஹூ பாங்கு 4:30
நோன்பு திறப்பு 6:34
மகரிப் பாங்கு 6:40
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

Tuesday 22 May 2018

ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு, பலர் காயம்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கிராம மக்கள் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியது. இதையொட்டி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் அறிவித்தனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் வேலை நிறுத்தை தொடங்கினர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்தது. 

 எனவே சட்டம்- ஒழுங்கினை பராமரித்திட நேற்று (திங்கட்கிழமை) இரவு 10 மணி முதல் நாளை (புதன்கிழமை) காலை 8 மணிவரை குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி தெற்கு போலீஸ் நிலையம் மற்றும் சிப்காட் போலீஸ் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவாக தூத்துக்குடியில் காலை 9 மணி முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பனிமய மாதா ஆலயம் அருகே திரண்ட போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ஆனால், ஆங்காங்கே போலீசார் அவர்களை வழிமறித்தனர். இருந்தபோதும், போலீசார் வைத்து இருந்த தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றனர்.

 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு இருப்பதால் அனைவரும் கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர்.

 இதனால் ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள் இரும்பு தடுப்புகளை தள்ளிக் கொண்டு முன்னேறிச் செல்ல முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. உடனடியாக போலீசார் தடியடி நடத்தினார்கள்.  கூட்டம் அதிகமானதால் போலீசாரால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மீண்டும் அவர்கள் கற்களை வீசியதால் போலீசார் பின்நோக்கி ஓடினார்கள். சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த போலீசாரின் இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் இந்த போராட்டம் பயங்கர கலவரமாக மாறியது. 

போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு நுழைய முயன்றனர். கலெக்டர் அலுவலக வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த போலீசார், போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது, அவர்களுக்குள் மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் மீண்டும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். இதில் சிதறி ஓடிய போராட்டக்காரர்கள் ஏராளமானவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகுந்தனர். அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கலெக்டர் அலுவலக வாகனங்கள் தாக்கப்பட்டது. அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

துப்பாக்கி சூட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவி வெனிஸ்டா உள்பட 9 பேர் பலியாகினர். உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தூத்துக்குடி கலவரத்தில், 11 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது, இந்த இக்கட்டான சூழலில் அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டும் என ஆளுநர் அழைப்பு விடுத்து உள்ளார். 

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி, பெருந்திரளான நபர்கள் மாவட்ட கலெக்டரால் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவையும் மீறி ஊர்வலமாகச் சென்று, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

 அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முற்றுகையிட்டவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் தடை உத்தரவையும் மீறி, காவலர்களின் அறிவுரையையும் புறக்கணித்து, காவலர்கள் மீது கற்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், காவல் துறையினரின் வாகனங்களை தீயிட்டும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டும், கலெக்டர் அலுவலகத்தையும் கல் வீசி தாக்கியும் சேதப்படுத்தியுள்ளனர். 

இவர்கள் தொடர்ச்சியாக வன்முறையில் ஈடுபட்டும், பொது மக்கள் உயிருக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்த காரணத்தினால், பொது மக்களின் உயிர்களை பாதுகாக்கும் பொருட்டும், பொதுத் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதை தவிர்க்கும் பொருட்டும், முற்றுகையாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையை கட்டுக்குள் கொண்டு வரவும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டது. இந்நிகழ்வில், துரதிருஷ்டவசமாக 9 நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tuesday 15 May 2018

கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை! பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி, காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணியால் பரபரப்பு


 கர்நாடகத்தில் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியின் பதவி காலம் வருகிற 28–ந் தேதியோடு நிறைவடைகிறது.

 இதனைதொடர்ந்து 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 12–ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 2 தொகுதிகளை தவிர 222 தொகுதிக்கு நடந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவானது. ஏற்கனவே திட்டமிட்டப்படி இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி 38 மையங்களிலும் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் சுமார் ஒரு மணி நேரம் ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் மாறி மாறி முன்னிலை பெற்றது. நேரம் ஆக ஆக, காங்கிரசை முந்திவிட்டு பா.ஜனதா முன்னேறியபடி இருந்தது. 11 மணியளவில் பெரும்பான்மைக்கு தேவையான 111 தொகுதிகளை தாண்டி பா.ஜனதா சுமார் 117 இடங்களில் முன்னிலை பெற்றது.

இதனால் அக்கட்சி தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். வெற்றி கொண்டாட்டத்தையும் நடத்தினர். கர்நாடகத்தில் சொந்த பலத்தில் ஆட்சி அமைப்போம் என்றும் அறிவித்தனர். ஆளும் காங்கிரஸ் 70 இடங்களை சுற்றியே இருந்தது. ஆனால் நேரம் ஆக ஆக பா.ஜனதாவின் தொகுதி எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. இது அக்கட்சி தலைவர்களை ஆதங்கமடைய செய்தது. அக்கட்சியின் தனிப்பெரும்பான்மை கனவு தகர்ந்தது. பா.ஜனதா 104 தொகுதிகளிலும், ஆளும் காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றியை தனதாக்குகிறது. 

 முல்பாகல் தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளரும், ராணிபென்னூர் தொகுதியில் கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர். முல்பாகல் தொகுதியில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் காங்கிரசின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 2 தொகுதியில் போட்டியிட்ட முதல்–மந்திரி சித்தராமையா தனது சொந்த ஊரான சாமுண்டீஸ்வரியில் சுமார் 36 ஆயிரத்து 42 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
 
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பே, கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைக்க ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அவசர அவசரமாக அறிவித்தது. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தாலும், முதல்–மந்திரி பதவியை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளது. அதே நேரத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதாவும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இருதரப்பும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க கோரிக்கை விடுத்து உள்ளது. இவ்விவகாரத்தில் ஆளுநர்தான் இறுதிமுடிவு எடுக்கவேண்டும்.

 தனிப்பெரும் கட்சியான பா.ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்தால், இரு வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். 

Monday 14 May 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 14/05/2018

பிடாரி கோவில் தெரு சஹாபுதீன் அவர்கள் மௌத்.
இன்று காலை9மணிக்கு மேலத்தெரு நல்லடக்கம் செய்யப்படும்.

Sunday 13 May 2018

வெளியூர் மௌத் அறிவிப்பு 13/05/2018

நமதூர்  மேலத்தெரு கணக்கு பிள்ளை வீட்டு        க.இ.மு.மைதீன் அப்துல் காதர்    அவர்களின் அண்ணன் க.இ.மு அப்துல் ஜலீல் அவர்கள் அடியக்கமங்கலம் பட்டாகால் தெரு தனது இல்லத்தில் மௌத்.

அன்னாரின் ஜனாசா 14-05-2018 திங்கட்கிழமை காலை 10மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

Monday 7 May 2018

மலேசியா 2018:ஹராப்பான் குறைந்த பெரும்பான்மையில் வெற்றி பெறும் – இன்வோக் மலேசியா கணிப்பு!

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி குறைந்த பெரும்பான்மையில் வெற்றி பெறும் என இன்வோக் மலேசியா ஆய்வு செய்து கணித்திருக்கிறது.
இந்த ஆய்வை தீபகற்ப மலேசியாவில் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.
அதன் படி, தேசிய முன்னணியால், பெர்லிஸ், பகாங், திரெங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் மட்டுமே நல்ல முடிவுகளைப் பெற முடியும் என்றும், என்றாலும் தேசிய முன்னணியால் 54 நாடாளுமன்றத் தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடியும் என்று இன்வோக் மலேசியா கூறுகின்றது.
அதேவேளையில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி 111 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது.
மேலும், பாஸ் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றியடைய முடியாது என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது.

இந்த ஆய்வை 11,991 பேரிடம் நடத்தியிருக்கும் இன்வோக் மலேசியா, அதன் மூலம் பக்காத்தான் ஹராப்பானுக்கு மலாய் வாக்காளர்களிடம் ஆதரவு பெருகியிருப்பதைக் கண்டறிந்திருக்கிறது.

Saturday 5 May 2018

கட்டிமேடு பள்ளிவாசலில் பிரச்சினை

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தொழுகை நடத்துவதில் பிரச்சினை ஏற்பட்டதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் படுகாயம் அடைந்தார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேட்டில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் கட்டிமேடு ஆதிரெங்கம் பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் தினமும் தொழுகை நடத்துவது வழக்கம். பள்ளிவாசலில் நீண்ட நாட்களாக ஹஸ்ரத்தாக(தொழுகை நடத்துபவர்) அப்துல்ஜப்பர் என்பவர் தொழுகை நடத்தி வருகிறார். இவர் தொழுகை நடத்துவதில் முரண்பாடு உள்ளதாக கூறி ஒரு தரப்பினர் இவர் தொழுகை நடத்தக்கூடாது என கூறி வருகின்றனர். மற்றொரு தரப்பினர் இவர் தான் தொழுகை நடத்த வேண்டும் என கூறி வருகின்றனர். இதனால் இரு தரப்பினர் இடையே பிரச்சினை இருந்து வந்தது.

இரு தரப்பினரும் திருத் துறைப்பூண்டி போலீசில் மாறிமாறி புகாரும் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் தஞ்சாவூர் வக்பு வாரியம் புதிய ஹஸ்ரத்தை (தொழுகை நடத்துபவர்) நியமித்து கொள்ள கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு நடைபெறும் தொழுகைக்காக புதிய ஹஸ்ரத் ரபிக் வந்துள்ளார். அப்போது பழைய ஹஸ்ரத் அப்துல்ஜப்பர் தொழுகையை முன்னதாகவே தொடங்கியதாக கூறி இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ஷேக்தாவுது படுகாயம் அடைந்தார்.

இதனால் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறாா.் இதுகுறித்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு இனிக்கோதிவ்யன் (பொறுப்பு), இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Thursday 3 May 2018

வெளியூர் மௌத் அறிவிப்பு 3/5/2018

கொடிக்கால்பாளையம் காட்டுபள்ளி தெரு பக்கீர்ஷா நாகூர் கனி,பக்கீர் முஹம்மது இவர்களின் மூத்த சகோதரி ஆமினா பீவி அவர்கள் நாகூர் தெத்தியில் மௌத்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
இன்று வியாழக்கிழமை காலை10மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

நமதூர் மௌத் அறிவிப்பு 03/05/2018

நமதூர் 52 பணப்பகுதி நகர் (பர்மா தெரு) மர்ஹூம் சேக் அலாவுதீன் அவர்களின் மனைவியும் பண்டாரி முஹம்மது ஆரிப் மற்றும் ராஜா என்கிற ஹஜ்ஜு முஹம்மது இவர்களின் தாயாருமான ஹபீபா பீவி அவர்கள் தனது இல்லத்தில் வாபத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.