Sunday 31 January 2016

அரசு பணியில் 10 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

தமிழக அரசு பணியில் இந்த ஆண்டு சுமார் 10 ஆயிரம் காலியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கே.அருள்மொழி தெரிவித்தார்.

2016-2017-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு காலஅட்ட வணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி சென்னையில் நேற்று வெளியிட்டார். இதை செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோ பனா ஆகியோர் பெற்றுக்கொண் டனர். பின்னர் டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த ஆண்டு 33 விதமான பணிகளில் 5,513 காலியிடங்களை நிரப்பும் வகையில் வருடாந்திர தேர்வு காலஅட்டவணையை வெளியிட்டுள்ளோம். எனினும் பல்வேறு துறைகளில் இருந்து இன்னும் காலியிடங்கள் வரும் வாய்ப்பு இருப்பதால் இந்த ஆண்டு சுமார் 10 ஆயிரம் காலியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக நிரப்பப்படும்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களில் குரூப்-4 பணிகளில் (இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர்) மட்டும் 4,931 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், துணை ஆட்சியர், உதவி வணிக அதிகாரி, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அலுவலர், மாவட்ட பதிவாளர் ஆகிய பதவிகளில் 45 காலியிடங்கள் (குரூப்-1 பணிகள்), 65 உதவி ஜெயிலர் பணியிடங்கள், 172 வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட பணிகளும் அறிவிப்பில் இருக்கின்றன.
முதல்முறையாக சுற்றுலா அதிகாரி (5 காலியிடம்) பணியிடமும், அரசுத்துறை நிறுவனமான எல்காட் நிறுவனத்தில் துணை மேலாளர் பணியிடமும் (12 காலியிடம்) டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
கடந்த ஆண்டு வருடாந்திர தேர்வு காலஅட்டவணையில் இடம்பெற்று நடத்த முடியாமல் போன தேர்வுகளும் இந்த ஆண்டு அட்டவணையில் சேர்க்கப் பட்டுள்ளன. வருடாந்திர தேர்வு காலஅட்டவணை டிஎன்பிஎஸ்சி இணையதளத்திலும் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
இவ்வாறு அருள்மொழி கூறினார்.


Saturday 30 January 2016

Kodikkalpalayam -26/01/2016 நமதூரில் நடைபெற்ற நிகழ்ச்சி தொகுப்பு

26/01/2016 அன்று நமதூரில் நடைபெற்ற  குடியரசு தினம் மற்றும் தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தொகுப்பு 










Friday 29 January 2016

ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் பெறலாம்: விதிகளை தளர்த்தியது மத்திய அரசு

கோப்புப் படம்: சிவ சரவணன்

விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் முகவரி, பின்னணியை அறிய போலீஸ் விசாரணை கட்டாயமாக இருந்தது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் விசாரணைக்கு அதிகபட்ச கால அவகாசம் 49 நாட்களாக இருந்தது. 2014-ல் 42 நாட்களாகவும் 2015-ல் 21 நாட்களாகவும் குறைக்கப்பட்டது. தற்போது ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, தன் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பதற்கான நோட்டரி அபிடவிட், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் எண் அட்டை ஆகிய 4 ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு பாஸ்போர்ட் பெறலாம் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட் வழங்கிய பிறகு வழக்கமான போலீஸ் விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய நடைமுறை குறித்து சண்டிகர் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ராகேஷ் அகர்வால் கூறியபோது, இனிமேல் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 5 முதல் 7 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும். ஒருவேளை ஆதார்- வாக்காளர்- பான் அடையாள அட்டைகள் இல்லை என்றால் வழக்கமான போலீஸ் விசாரணை நடைமுறை பின்பற்றப்படும் என்று தெரிவித்தார்.

Thursday 28 January 2016

வெள்ளத்தில் இழந்த கல்விச்சான்றிதழ் நகல்கள் இன்று முதல் விநியோகம்: பள்ளி கல்வித்துறை

சமீபத்தில் பெய்த கனமழையில் ஏராளமான மாணவர்கள் தங்கள் கல்விச் சான்றிதழ்களை பறிகொடுத்தனர்.
இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி, கோரிக்கை மனு அளித்த மாணவர்களுக்கு  உரிய கல்விச்சான்றிதழ் நகல்களை வழங்க கல்வித்துறை முடிவு செய்தது.
அதன்படி, விண்ணப்பித்த இடங்களிலேயே இன்று முதல் சான்றிதழ் நகல்களை பெற்றுக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

நமதூர் மௌத் அறிவிப்பு 27/1/2016

நமதூர்  ஜெயம் தெரு நிசாத் அலி அவர்களின் தாயார் முனிரா பானு அவர்கள் மௌத் .
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

Tuesday 26 January 2016

தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 5.79 கோடி: அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி காஞ்சிபுரம்



வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2016-ன் இறுதி வாக்காளர் பட்டியல்கள் இன்று (20.01.2016) வெளியிடப்பட்டது. இதன்படி தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 5.79 கோடியாகும்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2016-ன் இறுதி வாக்காளர் பட்டியல்கள் இன்று (20.01.2016) வெளியிடப்பட்டது.

இதன்படி, தமிழ்நாட்டில் தற்போது 5.79 கோடி வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் – 2.88 கோடி, பெண் வாக்காளர்கள் – 2.91 கோடி மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 4383) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2016-இல் வாக்காளர் பட்டியலில் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிகர வாக்காளர்களின் எண்ணிக்கை 12.33 இலட்சம் ஆகும். விண்ணப்பிக்கும்போது தங்கள் கைபேசி எண்ணை அளித்த சுமார் எட்டு லட்சம் வாக்காளர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகின்றது.
புதிய வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டு வருகின்றன. இவை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் 10.02.2016 வாக்கில் வழங்கப்படும்.

அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி:
மேலும், இறுதி வாக்காளர் பட்டியல்களின்படி, தமிழ்நாட்டிலேயே அதிக அளவு வாக்காளர்கள் கொண்ட சட்டமன்றத் தொகுதி காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள 27.சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 5,75,773 பேர் ஆவர். (ஆண்கள் 2,91,909, பெண்கள் 2,83,819, மூன்றாம் பாலினத்தவர் 45. 18-19 வயதுடைய இளைய வாக்காளர்களும் (12,797 பேர்) இத்தொகுதியில்தான் அதிகமாக உள்ளனர் (ஆண்கள் 7214 , பெண்கள் 5583).

குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி:

தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட சட்டமன்றத் தொகுதி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 164. கீழ்வேளூர் (தனி) சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,63,189 பேர் ஆவர். (ஆண்கள் 81,038, பெண்கள் 82,151).
பணித்தொகுதி வாக்காளர் அதிகமுள்ள சட்டமன்றத் தொகுதி மதுரை மாவட்டத்திலுள்ள 196. திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியாகும் (2402 பேர்). வெளிநாடுவாழ் வாக்காளர்கள் 47 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியல்களை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான http://elections.tn.gov.in/ என்ற வலைதளத்திலும் காணலாம்.
வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது. தகுதியுள்ள எவரும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமலிருந்தால், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளத்தின் மூலமாக இணைய வழியில் விண்ணப்பிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday 25 January 2016

திருவாரூரில் கட்டி முடிக்கப்பட்டு 8 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத நவீன தகன எரிவாயு மேடை

திருவாரூர் நகராட்சியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன தகன எரிவாயு மேடை இதுவரை பயன்பாட்டுக்கு வராததால், இந்த இடம் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி வருகிறது.
திருவாரூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்நகரில் தஞ்சை மெயின் ரோடு, நெய்விளக்கு தோப்பு பகுதியில் என 2 இடங்களில் சுடுகாடு உள்ளது.
இதில் நெய்விளக்கு தோப்பு பகுதியில் தான் நகரில் இறப்பவர்களில் 70 சதவீதம் பேரின் உடல் அடக்கம் அல்லது தகனம் செய்யப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சூழல் மாசுபடுவதை கருத்தில்கொண்டு தமிழக அரசின் உத்தரவால் நவீன தகன எரிவாயு மேடை ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் நெய்விளக்கு தோப்பு பகுதியில் கட்டப்பட்டது.
ஆனால், இன்றுவரை அந்த தகன எரிவாயு மேடை திறக்கப்படாததால், அந்த இடம் சமூக விரோதிகளின் புகலிடமாகியுள்ளது. அங்குள்ள பொருட்கள் பல திருடுபோய்விட்டன. மேலும், பல பொருட்கள் துருப்பிடித்து வீணாகிவிட்டன. இப்பகுதி திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அங்குள்ள மேற்கூரையுடன் கூடிய திறந்தவெளி மயானத்தில் சடலங்களை எரியூட்டும்போது கிளம்பும் புகையால் இப்பகுதியில் குடியிருக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தினமும் பாதிக்கப்படுகின்றனர்.
புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்பு ஏற்படுவதால் உடனடியாக எரிவாயு தகன மேடையைச் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, பல ஆண்டுகளாக திறக்கப்பட்டாமல் உள்ள நவீன தகன மேடையை திறக்கவும், பழுதான பொருட்களைச் சீரமைக்கவும் தொண்டு நிறுவனம் மூலம் பராமரிக்க தற்போது நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

ரஜினிகாந்த், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்டோருக்கு பத்மவிபூஷண் விருது


நடிகர் ரஜினிகாந்த், ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனரான மறைந்த திருபாய் அம்பானி உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருதும், ஹிந்தி நடிகர் அனுபம் கெர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவாலுக்கு பத்ம பூஷண் விருதும், ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன், நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கலை, இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2016 ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. 10 பேருக்கு, பத்ம விபூஷண் விருதும், 19 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 83 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 19 பேர் பெண்கள். அதன் விவரம் வருமாறு:
பத்ம விபூஷண் விருது: நடிகர் ரஜினிகாந்த், ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனர் மறைந்த திருபாய் அம்பானி, ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஈநாடு ஊடக அதிபர் ராமோஜி ராவ், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஜக்மோகன், இந்திய பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன (டிஆர்டிஓ) முன்னாள் தலைவர் வி.கே.ஆத்ரே, புற்றுநோய் சிகிச்சை நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா, குச்சிபுடி நடனக் கலைஞர் கிரிஜா தேவி, அமெரிக்கவாழ் இந்தியப் பொருளாதார நிபுணர் அவிநாஷ் தீட்சித்.
பத்ம பூஷண் விருது: ஹிந்தி நடிகர் அனுபம் கெர், பாடகர் உதித் நாராயண், மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அமைப்பின் (சிஏஜி) முன்னாள் தலைமை அதிகாரி வினோத் ராய், பென்னட் கால்மேன் குழுமத் (டைம்ஸ் ஆப் இந்தியா) தலைவர் இந்து ஜெயின், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நெவால்.
ஆன்மிக குருக்கள் சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி தேஜோமயானந்தா, இந்தியாவுக்கான அமெரிக்க முன்னாள் தூதர் ராபர்ட் பிளாக்வில், சிற்பக் கலைஞர் ராம் வி. சுதார், மணிப்பூர் மாநில நாடகக் கலைஞர் ஹெஸ்நாம் கன்னையாலால், ஹிந்தி, தெலுங்கு மொழி எழுத்தாளர் யாலகட்டா லட்சுமி பிரசாத்.
சம்ஸ்கிருத அறிஞர் என்.எஸ். ராமானுஜ தாத்தாசார்யா, பஞ்சாப் செய்தியாளர் பர்ஜிந்தர் சிங் ஹம்தர்த், இரைப்பை குடல் சிகிச்சை நிபுணர் டி. நாகேஸ்வர ரெட்டி, விஞ்ஞானி ஏ.வி.ராமா ராவ், தொழிலதிபர் பலோன்ஜி சபூர்ஜி மிஸ்திரி, மாருதி சுசூகி நிறுவனத் தலைவர் ஆர்.சி.பார்கவா, கட்டடக் கலை நிபுணர் ஹஃபீஸ் கான்டிராக்டர.
பத்ம ஸ்ரீ விருது: மும்பை தாக்குதல் வழக்கில் திறம்பட வாதாடிய அரசு வழக்குரைஞர் உஜ்வல் நிகம், ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன், நடிகை பிரியங்கா சோப்ரா, மறைந்த நடிகர் சயீது ஜாஃப்ரி, மாஸ்டர் கார்டு நிறுவனத் தலைமை செயல் அதிகாரி அஜய்பால் சிங் பங்கா.
வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, பரதநாட்டியக் கலைஞர் பிரதிபா பிரகலாத், குஜராத்தி மொழி நாட்டுப்புற இசைக் கலைஞர் பிகுதான் காத்வி, கோவா இசைக் கலைஞர் துளசிதாஸ் போர்கர், விஞ்ஞானி ஓங்கார்நாத் ஸ்ரீ வாஸ்தவா.

Sunday 24 January 2016

தமிழகம், புதுச்சிசேரியில் 3 நாள்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு


தமிழகம், புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புண்டு. அடுத்து வரும் 3 நாள்களுக்கும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் தெளிவாகக் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில், அதிகாலை நேரங்களில் மூடுபனி காணப்படும்.
வங்காள விரிகுடா கடல் பகுதியிலிருந்து, நிலம் நோக்கி வரும் காற்றின் மேலடுக்கில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியும், மாலத்தீவு முதல் லட்சத் தீவு வரையிலான பகுதியில் காற்றின் மேலடுக்குச் சுழற்சியும் காணப்படுகிறது.
இதன் காரணமாகவே, தமிழகம், புதுச்சேரியில் அடுத்து வரும் 3 நாள்களுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 86 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும் என, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவாரூர் மாவட்ட பேரவைத் தொகுதிகளில் 9.68 லட்சம் வாக்காளர்கள்


திருவாரூர் மாவட்ட பேரவைத் தொகுதிகளில் 9.68 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்
திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார் ஆட்சியர் எம். மதிவாணன்.
திருவாரூர், ஜன 20: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 9,68,841 வாக்காளர்கள் உள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியலை அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டு மேலும் அவர் பேசியது:
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய நான்கு பேரவைத் தொகுதிகளில் சிறப்பு சுருக்க திருத்தம் 2016-ன் படி 9,68,841 வாக்களர்கள் உள்ளனர். இதில் 4,84,297 ஆண் வாக்களர்கள், 4,84,527 பெண் வாக்களர்கள், இதரர் 17 பேர் உள்ளனர்.
மாவட்டத்தில் தொகுதி வாரியாக திருத்துறைப்பூண்டி 2,22,380 வாக்காளர்கள், மன்னார்குடி 2,40,899 வாக்காளர்கள், திருவாரூர் 2,52,466 வாக்காளர்கள், நன்னிலம் 2,53,096 வாக்காளர்கள் உள்ளனர். சிறப்பு சுருக்க திருத்தம் 2016-ன்படி 29,880 வாக்காளர்கள் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை (ஜன.20) தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடங்குகிறது. ஜன.31, பிப்.6-ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய, சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

Saturday 23 January 2016

மின்தடை

இன்று 23/1/2016 திருவாரூர் பகுதிகளில் மின்தடை

Thursday 21 January 2016

நமதூர் நிக்காஹ் தகவல் 24/01/2016








நமதூர் புதுமனைத்தெரு  S M M ஜமால் முஹம்மது  அவர்களின் மகளார் ஜம்ஷியா நஸ்ரின் மணமகளுக்கும் அடியக்கமங்கலம் ASM காதர் யூனுஸ் அவர்களின் மகனார் நூர் நிக்மான் மணமகனுக்கு நிக்காஹ் இன்ஷா  அல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1437 ரபுயூல் அகிர் பிறை 13 (24/01/2016 )அன்று ஞாயிறு முற்பகல் 11.45 மணிக்கு நமது     முஹ்யித்தீன்  ஆண்டவர்கள்  பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .








மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)

بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .

நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது

... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...

பொருள்அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!

Wednesday 20 January 2016

KEIA ஆண்டு கூட்டம் அழைப்பு

இன்ஷா அல்லாஹ் வரும் 22/1/2016 வெள்ளி ஜூம்மாவுக்கு பிறகு துபை அல்-மம்ஜார் பூங்கா வில் KEIA வின் 22ம் ஆண்டு கூட்டம் நடைபெறுகிறது.இதில் உறுப்பினர் கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.

Monday 18 January 2016

வருடாந்திர ஜமாஅத் மஹாஜனசபை கூட்டம்

நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர்உறவின் ஜமாஅத்தின் வருடாந்திர மஹாஜன சபை கூட்டம் ஜமாஅத் தலைவர் ஜலாலுதீன் தலைமையில் இன்ஷா அல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1437 ரபியுல் ஆகிர் பிறை 11 (21/01/2016) வியாழன் மாலை வெள்ளி இரவு 9:30 மணிக்கு மகஸூம் மஹாலில் நடைபெறுகிறது.
ஜமாஅத் அங்கத்தினர் கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Sunday 17 January 2016

போலியோ சொட்டு மருந்து முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் ஜன. 17-ஆம் தேதி 870 முகாம்கள் அமைக்கப்பட்டு, 5 வயதுக்குள்பட்ட 1,22,637 குழந்தைகளுக்கு முதல்கட்டமாக போலியோ சொட்டு மருந்து புகட்டப்படுகிறது என்று ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் போலியோவை ஒழிக்க ஊரகப் பகுதிகளில் 831 முகாம்கள், நகர்ப் பகுதிகளில் 39 முகாம்கள் என மொத்தம் 870 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், வளர்கல்வி மையங்கள், பள்ளிகள், புகைவண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், நடமாடும் குழுக்கள் மூலம் போக்குவரத்து வசதி இல்லாத இடங்களுக்குப் தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறும் இடங்களிலும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காய்ச்சல் உள்ள குழந்தைகளுக்கும், முகாம் அன்று பிறந்த குழந்தைகளுக்கும், ஏற்கெனவே எத்தனை முறை சொட்டு மருந்து புகட்டியிருந்தாலும் தற்போது சொட்டு மருந்து தவறாமல் புகட்டப்பட வேண்டும்.

பணி நிமித்தம் காரணமாக இடம் பெயர்ந்து செல்லும் செங்கல்சூளை தொழிலாளர்கள், கட்டுதமானத் தொழிலாளர்கள், சாலைப் பணி தொழிலாளர்கள், கைரேகை பார்ப்பவர்கள், ஆடு, மாடு மற்றும் வாத்து மேய்ப்பவர்கள். பிற மாநில தொழிலாளர்கள் (பொம்மை செய்பவர்கள்) போன்றவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி அவரவர்கள் பணியிடத்தில் சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பணியில் சுகாதாரம், ஊட்டச்சத்து, ஊரக வளர்ச்சி, கல்வித்துறை, வருவாய்த்துறை, மாணவர்கள், தன்னார்வலர்கள், ரோட்டரி சங்கத்தினர், மேற்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 3,480 பேர் போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணியில் ஈடுபடவுள்ளனர் என்று ஆட்சியர்

தெரிவித்துள்ளார்

Friday 15 January 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 15/1/2016

நமதூர் மணப்பறையா வீட்டு முஹம்மது இல்யாஸ் அவர்களின் மச்சான் அடியக்கமங்கலம் அப்துல் ரஷித் அவர்கள் நடுத்தெரு 2வது சந்து பாக்கர் காலனியில் மௌத்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னாரின் ஜனாசா 15/1/2016 இன்று இரவு 9 மணிக்கு நமது முஹ்யீத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

நமதூர் நிக்காஹ் தகவல்கள் 17/01/2016

நமதூர் வடக்கு தெரு மு.ப.மு சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகளார் யாஸ்மின் அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ்  நாளது 17/01/2016 ஞாயிறு முற்பகல் 11:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெறுகிறது.

நமதூர் மேலத்தெரு முஹ்மமது இஸ்மாயில் அவர்களின் மகளார் நூரே யாஸ்மின் அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 17/01/2016 அன்று இரவு 6:30 மணிக்கு நமது மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசலில் நடைபெறுகிறது.



மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)

بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .

நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது

... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...

பொருள்அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!

Thursday 14 January 2016

வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக் கூறி பலரிடம் ரூ. 20 லட்சம் வரை மோசடி


வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக் கூறி பலரிடம் ரூ. 20 லட்சம் வரை மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே அகரப் பொதக்குடியைச் சேர்ந்தவர் ரகமத்நிசா (50). இவரது மகன் அபுநசீம் (25). இவர் அதே பகுதியில் அல்அமானா டிராவல்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி, வெளிநாட்டுக்கு ஆள்களை அனுப்பி வந்துள்ளார். இவருக்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் ஜெகபர்சாதிக் (40), நூர்முகமது (44) ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அபுநசீமிடம் வெளிநாட்டுக்கு செல்வதற்காக கூத்தாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலர் பணம் கொடுத்தனர். அவர்கள் அகரப்பொதக்குடிக்கு சென்று பார்த்தபோது, அங்கு யாரும் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து தகலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.ஜெயச்சந்திரன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில், குற்றப்பிரிவு டிஎஸ்பி பலுலா, ஆய்வாளர் சந்திரசேகர், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரதராஜன், ராஜேந்திரன், வெங்கட் ஆகியோர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் அபிநசீம், இவரது தாய் ரகமத்நிசா, நண்பர்கள் ஜெகபர்சாதிக், நூர்முகமது ஆகியோர் சேர்ந்து பலரிடம் ரூ.20 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நூர்முகமதுவை கைது செய்த போலீஸார் தலைமறைவாக உள்ள அபிநசீம் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்

Tuesday 12 January 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 12/01/2016

நமதூர் மலாயா தெரு துக்கான் வீட்டு மர்ஹூம் அப்துல் பத்தாஹ் அவர்களின் மனைவியும், லியாக்கத்தலி,அப்துல் சத்தார் , ஹசன் குத்தூஸ் இவர்களின் தாயாருமான லத்திபா பீவி அம்மாள் அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி
வஇன்னா இலைஹி
ராஜிஊன்.


அன்னாரின் ஜனாசா 12/1/2016 செவ்வாய் பிற்பகல் 3:30 மணிக்கு நமது முஹ்யீத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Monday 11 January 2016

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்



வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரி கூறியுள்ளார்.

உதவித்தொகை

திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி செல்லத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தவறியவர்களுக்கு மாதம் ரூ.100-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.150-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.200-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 10-ம் வகுப்பு வரை படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.300-ம், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.375-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.450-ம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

விதிமுறைகள்

இந்த உதவித்தொகை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2015-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி அன்று ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேர மாணவராக இருத்தல் கூடாது. தொலைதூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம். அரசுத்துறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுயவேலை வாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருத்தல் கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.

தகுதி உடையவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களுடன் அடுத்த மாதம் (பிப்ரவரி) 29-ந் தேதிக்குள் அலுவலக வேலை நாளில் திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும், மற்றவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Sunday 10 January 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 10/1/2016

திருவாரூர் புதுத்தெரு காட்டுராஜா வீட்டு மர்ஹூம் ஜாபர் அவர்களின் மகளாரும் அடியக்கமங்கலம் ராஜாத்தெரு ஹாஜாத்துல்லா அவர்களின் மனைவியும் குத்புதீன்,தங்கதுரை,முனவர் ஜமான் இவர்களின் மூத்த சகோதரிமான ரஹ்மத்துன்னிசா அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி
வஇன்னா இலைஹி
ராஜிஊன்.
அன்னாரின் ஜனாசா 11/1/2016 திங்கள் காலை 10:30 மணிக்கு நமது மேலத்தெரு  பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது

மீன் உணவு சிறு விளக்கம்

உணவு பிராணிகளை உயிரோடு அறுத்து தான் சாப்பிட வேண்டும் என்று இருக்கும் போது, மீன்களை மட்டும் உயிரோடு அறுக்காமல் (இறந்தவற்றை) சாப்பிடுவது ஏன்?

பதில்:

திருக்குர்ஆனில் இவ்வசனங்களில் (5:96, 16:14) மீன்களை உணவாக உட்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. மற்ற உயிரினங்களை அறுத்து உண்ண வேண்டும். ஆனால் மீன்களை அறுக்கத் தேவையில்லை: தானாகச் செத்த மீன்களையும் உண்ணலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

மீன் அல்லாத உயிரினங்களை அறுக்க வேண்டும்; மீனை அறுக்காமல் உண்ணலாம் என்ற வேறுபாட்டுக்குக் காரணம் என்ன? என்று சந்தேகம் சிலருக்கு உள்ளது.

நீர் வாழ் உயிரினங்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

நீர்வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற இரத்தம் கிடையாது. அதை உயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இரத்தம் சிறிதளவு கசியுமே தவிர இரத்தம் ஓடாது. வடிவது கூட இல்லை.

இஸ்லாமிய நம்பிக்கையின்படி ஓட்டப்படும் இரத்தம் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தான் ஆடு, மாடு போன்ற உயிரினங்களை அறுக்கும்போது வெளியாகும் இரத்தத்தை உண்ணக் கூடாது.

ஆடு, மாடு போன்றவை உயிருடன் இருக்கும்போது அறுத்தால் மட்டுமே அதிலிருந்து இரத்தம் வெளிப்படும். செத்த பிறகு அறுத்தால் இரத்தம் வெளிப்படாது. எனவே அந்த இறைச்சியைச் சாப்பிடும்போது இரத்தத்தையும் சேர்த்து சாப்பிடும் நிலை ஏற்படுகிறது.

இரத்தத்தில் மனிதன் உட்கொள்ளக் கூடாத அணுக்களோ, கிருமிகளோ இருக்கலாம். பிராணிகள் செத்தவுடன் இரத்தம் உறைய ஆரம்பித்து விடுகிறது. இரத்தத்தில் வாழ முடியாத கிருமிகள் மற்ற பகுதிகளுக்கும் பரவி விடுகிறது. இரத்தத்தைச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் அனைத்தும் அந்த இறைச்சியைச் சாப்பிடும்போதும் ஏற்படும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மீன்களுக்கு ஓடக் கூடிய இரத்தம் இல்லாததால் அறுத்தாலும் அதிலிருந்து இரத்தம் பீரிட்டு ஓடாது. தானாகச் செத்தாலும் சதை வரை ஊடுறுவும் இரத்தம் மீன்களில் இல்லை. எனவே தான் மீனை அறுக்குமாறு இஸ்லாம் கூறவில்லை.

Saturday 9 January 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 09/01/2016

நமதூர் மேலத்தெரு மர்ஹூம் முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனாரும் ஹாஸ்நகர் முஹம்மது ஹூசேன் அவர்களின் சகோதரரும் சேக் அலாவுதீன் முஹம்மது நத்தர் இவர்களின் தகப்பனார் அப்துல் ஜமீல் அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி
வஇன்னா இலைஹி
ராஜிஊன்.
அன்னாரின் ஜனாசா 9/1/2016 சனிக்கிழமை இரவு 9:30 மணிக்கு நமது முஹ்யீத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

நமதூர் மௌத் அறிவிப்பு 9/1/2016

நமதூர் தெற்கு தெரு நல்ல முஹம்மது அவர்களின் மனைவி யும்,ஹாஜா நஜூபுதீன் அவர்களின் தாயாரும் ,பக்கீர் முஹம்மது , அபுதாலிப் இவர்களின் மாமியாருமான பாத்துமுத்து பீவி அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி
வஇன்னா இலைஹி
ராஜிஊன்.
அன்னாரின் ஜனாசா 9/1/2016 சனிக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு நமது முஹ்யீத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Friday 8 January 2016

திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு பொருட்கள்


திருவாரூர் மாவட்டத்தில் 3½ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் மதிவாணன் தெரிவித்தார்.



தமிழகத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் சிறப்பு பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டு சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், 2 அடிநீள கரும்பு மற்றும் ரூ.100 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அதன்படி நேற்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணிகள் தொடங்கியது. திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் கீழவீதியில் உள்ள நியாயவிலை கடையில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மதிவாணன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 43 ஆயிரத்து 614 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த பரிசு பொருட்கள் பொங்கல் தினத்திற்கு முன்பு அனைவருக்கும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

Thursday 7 January 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 7/1/2016

நமதூர் தெற்கு தெரு மர்ஹூம் அப்துல் பத்தாஹ் அவர்களின் மனைவியும், ஹலிலூர் ரஹ்மான், மர்ஹூம் ஹாஜா அலாவூதீன், ஆட்டோ சுல்தான் கபீர் இவர்களின் தாயாருமான ஹைஜம்மாள் அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாசா 7/01/2016 வியாழன் முற்பகல் 11:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வு

மார்சு 4 முதல் பிளஸ்2 வும் பத்தாம் வகுப்பு 29 துவக்கம்

Wednesday 6 January 2016

கோழி -குறிப்புகள்

⚠ Warning ⚠
மதுவை விட பாதிப்பு❓
   🐓🐓 கோழி 🐓🐓

கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு.

⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

🐓ஆண்களின்  உயிரணுக்களை அழிக்கிறது.😯
ஆண்மையை அழிக்கும் பிராய்லர்

🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.😯

🐓"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்".😯

🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.😯

"இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது".😴😴

🐓பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.😟

🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.😇

🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.😇😕

🐓சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.😳

🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.

🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.😯

🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .😟

🐓ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர் களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.

📳 பகிருங்கள் 📳

Monday 4 January 2016

ஹஜ் 2016 விண்ணப்பம் துவக்கம்

2016 வருட ஹஜ் பிரயாணத்திற்காண விண்ணப்பம் 14-1-2016 முதல் 8-2-2016 வரை வரவேற்கப்படுகிறது.

அதன்பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாதாம் . தாமதம் வேண்டாம். முந்திக்கொள்ளுங்கள்.

மேலும் விபரங்கள் அறிய:-

http://indianliveresults.blogspot.in/2015/02/hajj-online-application-form-2016-haj.html?m=1

http://www.hajcommittee.gov.in/

Sunday 3 January 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 3/1/2016

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .கொடிநகர் பள்ளிகூடத் திடல் ஜெகபர்அண்ணன்
 (வாழை பழக்கடை) அவர்கள் மௌத்.அன்னாரின் மறுமை வாழ்விற்காக
துஆ செய்வோம்.

Saturday 2 January 2016

நமதூர் நிக்காஹ் தகவல்

நமதூர் மேலத்தெரு ஹஜ்ஜூ முகம்மது அவர்களின் மகளார் ரிபாயா தஸ்லிம் அவர்கள் நிக்காஹ் 03/01/2016 அன்று பகல் 11:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெறுகிறது.
பாரக்கல்லாஹ்..