Sunday 17 January 2016

போலியோ சொட்டு மருந்து முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் ஜன. 17-ஆம் தேதி 870 முகாம்கள் அமைக்கப்பட்டு, 5 வயதுக்குள்பட்ட 1,22,637 குழந்தைகளுக்கு முதல்கட்டமாக போலியோ சொட்டு மருந்து புகட்டப்படுகிறது என்று ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் போலியோவை ஒழிக்க ஊரகப் பகுதிகளில் 831 முகாம்கள், நகர்ப் பகுதிகளில் 39 முகாம்கள் என மொத்தம் 870 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், வளர்கல்வி மையங்கள், பள்ளிகள், புகைவண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், நடமாடும் குழுக்கள் மூலம் போக்குவரத்து வசதி இல்லாத இடங்களுக்குப் தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறும் இடங்களிலும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காய்ச்சல் உள்ள குழந்தைகளுக்கும், முகாம் அன்று பிறந்த குழந்தைகளுக்கும், ஏற்கெனவே எத்தனை முறை சொட்டு மருந்து புகட்டியிருந்தாலும் தற்போது சொட்டு மருந்து தவறாமல் புகட்டப்பட வேண்டும்.

பணி நிமித்தம் காரணமாக இடம் பெயர்ந்து செல்லும் செங்கல்சூளை தொழிலாளர்கள், கட்டுதமானத் தொழிலாளர்கள், சாலைப் பணி தொழிலாளர்கள், கைரேகை பார்ப்பவர்கள், ஆடு, மாடு மற்றும் வாத்து மேய்ப்பவர்கள். பிற மாநில தொழிலாளர்கள் (பொம்மை செய்பவர்கள்) போன்றவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி அவரவர்கள் பணியிடத்தில் சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பணியில் சுகாதாரம், ஊட்டச்சத்து, ஊரக வளர்ச்சி, கல்வித்துறை, வருவாய்த்துறை, மாணவர்கள், தன்னார்வலர்கள், ரோட்டரி சங்கத்தினர், மேற்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 3,480 பேர் போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணியில் ஈடுபடவுள்ளனர் என்று ஆட்சியர்

தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment