Saturday 31 October 2015

திருவாரூரில் பரவலாக மழை: சுவர் இடிந்து குழந்தை உயிரிழந்தது.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக வீட்டுச் சுவர் இடிந்து இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே அச்சுதமங்கலம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு. தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சி. இவர்களது பெண் குழந்தை ஆனந்தி (2).
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை இவர்களது கூரை வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் குழந்தை ஆனந்தி மூச்சுத்திணறி உயிரிழந்தது. இதுகுறித்து நன்னிலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): நன்னிலம் - 16.20, திருத்துறைப்பூண்டி - 8.40, திருவாரூர் - 4.20, குடவாசல், பாண்டவையாறு தலா 2.20, வலங்கைமான், மன்னார்குடி தலா 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மனிதநேய மக்கள் கட்சி: செயல்வீரர்கள் கூட்டம்

திருவாரூரில் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஒருங்கிணைந்த மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் டிசம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் திரளாகப்  பங்கேற்பது, 2016 பேரவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.   கூட்டத்தில் தமுமுக மாநிலத் தலைவர் ரிபாயி ரஷாதி செய்தியாளர்களிடம் கூறியது:
 மோடி அரசு பதவியேற்று 17 மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.  பாஜகவின் அமைச்சர்கள், தலைவர்கள் சிறுபான்மையினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இப்போக்கை பிரதமர் மோடி தலையிட்டு தடுக்க வேண்டும்.   மக்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டியக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி  பங்கேற்றது. அரசியல் கூட்டணியாக மாற்றப்படும் என்ற பேச்சு எழுந்தவுடன் நாகரிகமாக விலகியது. தமிழகத்தில் விவசாயிகள் பிரச்னை குறித்து தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி அவர்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 இந்தியாவில் அதிகளவில் பருப்பு பறிமுதல் செய்த பிறகும் விலை குறையவில்லை. பருப்பு விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்றார்.
  மமக மாநில துணைப் பொதுச் செயலாளர் கோவை செய்யது, மமக மாவட்டப்  பொருளர் தீன்முகம்மது, தமுமுக மாவட்டப் பொருளர் பஜிலுல்ஹக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Friday 30 October 2015

வெளிநாடு வாழ் இந்தியர்களும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேரலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு


தேசிய ஓய்வூதிய திட்டத்தில் என்.ஆர்.ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் சேரலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: -
இந்திய குடிமக்கள் அனைவரும் தங்கள் ஓய்வு கால பணத் தேவைகளை சமாளிப்பதற்காக தேசிய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. தற்போது இதில் வெளிநாடு வாழ் இந்தியர்களும், சேர்ந்து கொள்ள முடியும்.
இந்தியாவிலுள்ள தங்கள் வங்கிக் கணக்கில் வழக்கமாக பணம் செலுத்தும் முறையிலேயே ஓய்வூதிய திட்டத்துக்கான சந்தாவையும் செலுத்தலாம், குறைந்த பட்சம் 6000 ரூபாய் முதல் செலுத்தலாம் எனவும் அரசுடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 
இத்திட்டத்தில் சேரும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென தனியாக எந்த ஒரு கட்டுப்பாடும் நிபந்தனையும் விதிக்கப்படாது என்றும் அந்த 

Thursday 29 October 2015

எகிப்தில் அதிசயம்: நெற்றியில் மட்டும் ஒற்றைக்கண்ணுடன் பிறந்த குழந்தை


எகிப்தில் உள்ள எல்சென்பெல்லாவெய்ன் நகரில் உள்ள மருத்துவமனையில் நெற்றியில் மட்டும் ஒற்றைக்கண்ணுடன் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:
சைக்ளோபியா’ எனப்படும் இவ்வகை குறைபாடு ஆயிரத்தில் நான்கு பிரசவங்களில், குறிப்பாக.., விலங்கினப் பிரசவங்களில் ஏற்படுவது உண்டு. கருவுற்றிருந்த காலத்தில் அந்தக் குழந்தையின் தாய் உட்கொண்ட மருந்துகள் மற்றும் கதிர்வீச்சின் பாதிப்பால், கருவில் இருந்த அந்தக் குழந்தைக்கு இந்த குறைபாடு ஏற்பட்டிருக்கலாம்.
எனினும் இந்த குழந்தை இன்னும் சில நாட்களே உயிர்வாழும் எனவும் தெரிவித்தனர். இதனால் அந்த குழந்தையின் பெற்றோர் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

Wednesday 28 October 2015

அனைத்து நாள்களிலும் பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

பள்ளிகளில் திங்கள் முதல் ஞாயிறு வரை விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையிலு, ஒரு பள்ளியில் ஆதார் எண்ணுக்குப் பதிவு செய்யாத மாணவர்களின் எண்ணிக்கை 100 அல்லது அதற்கு மேல் இருந்தால், அந்தப் பள்ளியில் ஆதார் எண் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்துவகைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் விதமாக இந்தப் பணியை சிறப்பாக நடத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முதன்மை ஒருங்கிணைப்பாளராக இருந்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோருடன் இணைந்து இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்.
விடுமுறை உள்பட அனைத்து நாள்களிலும் ஆதார் எண் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும். பள்ளி வேலை நாள்களில் வேலை நேரம் முடிந்த பின்பும், அனைத்து விடுமுறை நாள்களிலும் பொதுமக்கள் ஆதார் எண் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
ஆதார் முகாம்களுக்கான ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர்களில் ஒருவரை அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் நியமிக்க வேண்டும்.
ஆதார் எண் பதிவு செய்யும் கருவிகளைப் பொருத்த ஒரு வகுப்பறைகளை ஒதுக்கி தேவையான வசதிகளைச் செய்ய வேண்டும். ஆதார் பதிவுகளை மேற்கொள்வதற்கான கால அட்டவணையையும் தயாரிக்க வேண்டும்.
ஒரு பள்ளியில் ஆதார் எண் பதிவு செய்யப்பட வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாக இருக்கிற பள்ளிகளைக் கண்டறிந்து, அந்தப் பள்ளிகளுக்கு அருகில் நடைபெறும் ஆதார் பதிவு செய்யும் மு

Tuesday 27 October 2015

திருவாரூர் ஆழித்தேர் வெள்ளோட்டம் நடந்தது


திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தியாகராஜர் கோயில் ஆழித் தேர் வெள்ளோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 
 திருவாரூர் நகரில் நடைபெறும் விழாக்களில் தொன்மையும், பெருமையும் வாய்ந்த விழா என்றால் அது ஆழித் தேரோட்ட விழாவே. ஐந்தடுக்கு கட்டுமானங்களை கொண்ட தோó பீடத்தில் 96 அடி உயரத்தில் அலங்காரம் செய்யப்பட்டு சுமார் 350 டன் எடையில் தோó கம்பீரமாக அசைந்து வருவதைப் பார்க்க பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தாóகள் வருவார்கள்.
 கடந்த 16.7.2010 அன்று நடைபெற்ற ஆழித்தேரோட்டத்துக்குப் பிறகு தேர் புதுப்பிக்க முடிவெடுக்கப்பட்டு, 2.8.2010 முதல் தேர் பிரிக்கும் பணி தொடங்கி சில மாதங்களில் நிறைவடைந்தது. பின்னர், புதுத்தேர் கட்டும் பணி சுமார் ஓராண்டுக்கு பிறகு தொடங்கி சில நாள்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
 இதையடுத்து, தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை திங்கள்கிழமை ஆழித் தேர், சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்ட விழா நடத்த தீர்மானித்தது. 
 அதன்படி, திங்கள்கிழமை ஆழித்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி,பிரவேச பலி, ம்ருத்சஹ்கிரஹணம், மாலை 5 மணிக்கு அங்குரார்ப்பணம், ரஷ்பந்தனம், 6 மணிக்கு முதல்கால யாகம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. 
 தேர் வெள்ளோட்டம்: திங்கள்கிழமை காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகம், 9 மணிக்கு பூர்ணஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.15 மணிக்கு ஆழித்தேர் பிரதிஷ்டை செய்யப்பட்டதையடுத்து, காலை 9.20 மணியளவில் சுப்ரமணியர் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. பின்னர் 9.30 மணிக்கு ஆழித்தேர் வெள்ளோ

Monday 26 October 2015

கட்டண சேவையை இந்த வாரம் முதல் துவங்குறது யூடியூப்

பத்தாண்டு காலம் இலவச சேவையை வழங்கிவந்த யூடியூப் இணையதளம், அதன் முதலாவது கட்டண சேவையை இந்த வாரம் துவங்கியிருக்கின்றது.
சந்தாதாரர்கள் இதன் மூலம், விளம்பரங்கள் இல்லாத, பிரத்தியேக காணொளி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். யூடியூப் ரெட் என்ற இந்த சேவையில், மாதம் 9.99 டாலர் பணம் (ரூ. 650) செலுத்தினால், செல்பேசி, கணினி, என எல்லா தளங்களிலும் விளம்பரமின்றி வீடியோக்களை காணலாம்.  அக்டோபர் 28 முதல் அறிமுகமாகும் இந்த சேவை, முதலில் அமெரிக்காவில் மட்டும் தொடங்கப்படுகிறது. இணையம் மூலமான ஒளிபரப்புச் சந்தையில் வலுத்துவரும் போட்டிச் சூழலை, யூடியூப் எப்படி எதிர்கொள்ளப் போகின்றது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Sunday 25 October 2015

ஆழித்தேர் வெள்ளோட்டம்: திருவாரூரில் நாளை போக்குவரத்து மாற்றம்

திருவாரூரில் திங்கள்கிழமை (அக். 26) நடைபெறவுள்ள ஆழித்தேர் வெள்ளோட்டத்தையொட்டி, நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருவாரூரில் சனிக்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர், சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. தேர் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளில் வருவதால் இவ்வழியில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, சென்னை, கடலூர், சீர்காழி, மயிலாடுதுறை, நன்னிலம், நாகூர், ஓடாச்சேரி, திட்டச்சேரி, திருமருகல் ஆகிய வழித் தடங்களில் வரும் பேருந்துகள், இதர வாகனங்கள் கொடிக்கால்பாளையம் அய்யனார்கோவில் தெரு, நேதாஜி சாலை, பேபி டாக்கீஷ் சாலை வழியாக திருவாருர் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
இதேபோல திருவாருர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கடலூர், சீர்காழி, மயிலாடுதுறை, நன்னிலம், நாகூர், ஓடாச்சேரி, திட்டச்சேரி மற்றும் திருமருகல் ஆகிய வழித் தடங்களில் செல்லும் பேருந்துகள், இதர வாகனங்கள் மேம்பாலம், விளமல், பவித்திரமாணிக்கம், காட்டூர், திருக்கண்ணமங்கை, வடகண்டம், வெட்டாற்றுபாலம், எட்டியலூர், மத்தியப் பல்கலைக்கழகம், கங்களாஞ்சேரி வழியாக செல்ல வேண்டும்.

துபை விமான நேரத்தில் மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது

திருச்சி - துபை இடையே இயக்கப்பட்டு வரும் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நேரத்தில் தாற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் இயங்கப்பட்ட விமானம் பகல் நேரத்தில் இயக்கப்படவுள்ளது.
துபையிலிருந்து தினசரி நள்ளிரவு 12.05 மணிக்கு திருச்சி வந்து பயணிகளை இறக்கி ஏற்றிக்கொண்டு மீண்டும் 12.55 மணிக்கு துபை செல்லும். இந்த விமானம் குளிர்கால அட்டவணை மாறுதல் தொடர்பாக பகல் நேர விமானமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த விமானம் இனி பகல் 12.45-க்கு திருச்சி வந்து அதன் பின்னர் 1.30-க்கு மீண்டும் துபை புறப்பட்டுச்செல்லும்.
இந்த நடைமுறை இன்று தொடங்கி டிசம்பர் 6-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அதன் பின் மீண்டும் மாற்றம் செய்யப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ள

தேங்காய் மூடி வைக்கப்பட்டதால் பரபரப்பு ரெயில்கள் தாமதமாக சென்றன


நீடாமங்கலத்தில் தண்டவாளத்தின் இணைப்பு பகுதியில் (பாயிண்ட்) தேங்காய் மூடி வைக்கப்பட்டதால் ரெயில்கள் தாமதமாக சென்றன.

கண்காணிப்பு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் கடந்த காலங்களில் தண்டவாளத்தில் ஜல்லிக்கற்கள் வைப்பது, தேவையற்ற பொருட்களை வைத்து சிக்னல் கிடைக்காமல் செய்வது போன்ற தேவையற்ற செயல்கள் ரெயில்வே துறையினரையும் ரெயில் பயணிகளையும் அச்சுறுத்தும் வகையில் நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர், மாநில போலீசார், க்யூ பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை எடுத்தனர். மேலும் விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து அத்தகைய செயல்கள் நிறுத்தப்பட்டன. இருப்பினும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேங்காய் மூடி

இந்த நிலையில் நேற்று காலை 8.50 மணிக்கு மன்னார்குடியிலிருந்து, மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரெயில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு வந்து நின்றது. அப்போது காரைக்காலிலிருந்து, திருச்சி செல்லும் பாசஞ்சர் ரெயில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் கிராசிங் ஆக வேண்டி இருந்தது. இந்த ரெயிலும் நீடாமங்கலம் ரெயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது சிக்னல் கிடைக்காததால் நீடாமங்கலம் அருகே ரெயில் நின்றது.

ரெயில் வராமல் நின்றதால் சந்தேகமடைந்த ரெயில்வே நிலைய மேலாளர் மற்றும் ஊழியர்கள் ரெயில் நின்ற பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது நீடாமங்கலம்-திருவாரூர் ரெயில் பாதையில் சிக்னல் பாயிண்டில் தேங்காய் மூடி வைக்கப்பட்டிருந்ததால் சிக்னல் விழவில்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தேங்காய் மூடியை ரெயில்வே ஊழியர்கள் பாயிண்டில் இருந்து சிரமப்பட்டு எடுத்தனர்.

பின்னர் சிக்னல் கிடைத்ததும் காரைக்கால் பாசஞ்சர் ரெயில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு வழக்கமான நேரத்தை விட 25 நிமிடம் தாமதமாக வந்தது. பின்னர் காரைக்கால், மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் நீடாமங்கலம் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் நெடுஞ்சாலை போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது. 

Saturday 24 October 2015

வடகிழக்கு பருவமழை 28-ந்தேதி தொடங்குகிறது வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் பேட்டி









வடகிழக்கு பருவமழை 28-ந் தேதி தொடங்குகிறது என்று சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

28-ந் தேதி தொடங்குகிறது

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டி உள்ள இலங்கை கடற்கரை பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகி உள்ளது. அதன் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. 26-ந் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் காரணமாக வடகிழக்கு பருவமழை 28-ந் தேதி தொடங்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அதாவது 28-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.

இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

3 ஆண்டுகளாக குறைந்த அளவில் மழை

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டுக்கு சராசரியாக 44 செ.மீ. மழை பெய்யவேண்டும். ஆனால் கடந்த 3 வருடங்களாக மழை பொய்த்துவிட்டது. 2012-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரி அளவை விட 16 சதவீதம் குறைவாக பெய்தது. 2013-ம் ஆண்டு 33 சதவீதம் மழை குறைவாக பெய்தது. 2014-ம்(கடந்த ஆண்டு) ஆண்டு 2 சதவீதம் குறைவான மழை பெய்துள்ளது.

இந்த வருடமாவது வடகிழக்கு பருவமழை போதிய அளவுக்காவது பெய்யவேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். சராசரியாக அக்டோபர் மாதம் 20-ந் தேதி தொடங்கும். ஆனால் அக்டோபர் 24-ந் தேதி ஆகியும் தொடங்கவில்லை.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

கன்னிமார் 8 செ.மீ., சிவகிரி 7 செ.மீ., பூதப்பாண்டி, ராஜபாளையம் தலா 3 செ.மீ., கடலாடி, ஸ்ரீவைகுண்டம் தலா 2 செ.மீ., பேச்சிப்பாறை, தக்கலை தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

சென்னையில் மழை

மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை வேப்பேரி, நுங்கம்பாக்கம், தாம்பரம் பகுதிகள் மற்றும் சென்னை சுற்றுப்புறங்களில் நேற்று பகலில் மழை தூறிக்கொண்டே இருந்தது.

அதன் காரணமாக பகலிலேயே குளிர்ந்த காற்று வீசியது.

கடந்த மாதம் தான் வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான செப்டம்பர் : ஆய்வில் அதிர்ச்சி


உலகின் வரலாற்றிலேயே கடந்த மாதம் தான் மிகுந்த வெப்பமான செப்டம்பர் மாதமாக பதிவாகியிருப்பதாக  அமெரிக்காவின் கடல் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
1880ம் ஆண்டில் இருந்து எடுத்துக் கொண்டால், 2015ம் ஆண்டுதான் மிகவும் வெப்பமான ஆண்டாகப் பதிவாகியிருப்பதாகவும், தொடர்ந்து 5 மாதங்கள் அதிகபட்ச வெப்பம் நிலவுவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில், நிலம் மற்றும் கடற் பரப்புகளை கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில், 2015ம் ஆண்டில் தொடர்ந்து 9 மாதங்களுமே வெப்பம் அதிகபட்சமாகவே பதிவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வெப்பம் என்று நாம் ஒவ்வொரு ஆண்டுமே சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு ஆய்வு முடிவுகளும் அதை உறுதிபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Friday 23 October 2015

அனைத்து வங்கிகளும் இன்று (23/10/2015) வழக்கம் போல் இயங்கும்

மொஹரம் பண்டிகைக்கான விடுமுறை சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டதால் அனைத்து வங்கிகளும் இன்று 23/10/2015 வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் மொஹரம் பண்டிகைகளுக்காக தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தலைமை காஜியின் அறிவிப்பைத் தொடர்ந்து மொஹரம் விடுமுறை, வெள்ளிக்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்கு மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்களும் நாளை வழக்கம்போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வங்கிகள் அனைத்தும் இன்று இயங்கும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரும் சனிக்கிழமை, நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகள் அனைத்திற்கும் விடுமுறை என அறிவிக்கபட்டுள்ளது.

Thursday 22 October 2015

வெளிநாட்டு மௌத் அறிவிப்பு 22/10/2015

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன்

நமதூர் நடுத்தெரு பரிதா இல்லம் இமாம் ஹூசேன் அவர்களின்  மூத்த மருமகன் முஹம்மது இப்ராஹிம் அவர்கள் மலேசியாவில் மௌத்

மேகி நூடுல்ஸ் மீதான தடையை நீக்கியது குஜராத் அரசு

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் "மேகி' உடனடி நூடுல்ஸ் உணவுப் பொருள் விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை குஜராத் மாநில அரசு திங்கள்கிழமை நீக்கியது.
மேகி நூடுல்ஸ் உணவுப் பொருள்களுக்கு தேசிய அளவில் விதிக்கப்பட்டிருந்த தடையை, மும்பை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கியதையடுத்து, குஜராத் அரசின் மாநில உணவு, மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதை, அந்த ஆணையத்தின் தலைவர் எச்.ஜி.கோஷியா திங்கள்கிழமை தெரிவித்தார்.
முன்னதாக, மேகி நூடுல்ஸ் உணவுப் பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட காரீயம், மோனோசோடியம் குளூட்டாமேட் நச்சு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அந்த உணவுப் பொருள்களின் விற்பனைக்கு குஜராத் அரசு கடந்த ஜூன் மாதம் தடை விதித்தது.

Wednesday 21 October 2015

குரூப்-2A தேர்வுக்கான தேதி மாற்றம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2A ஜனவரி மாதம் 24 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) தேர்வு அறிவிப்பை கடந்த செப்டம்பர் மாதம் சி.பி.எஸ்.இ. வெளியிட்டது. இம்முறை நெட் தேர்வும், டி.என்.பி.எஸ்.சி. தேர்வும் ஒரே தேதியில் வருவதால் எதை எழுதுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 27 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு, ஜனவரி மாதம் 24 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

Tuesday 20 October 2015

மொஹரம் விடுமுறை 24/10/2015 க்கு மாற்றம்

இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கும் மொஹரம் தினமானது, வரும் 24- ஆம் தேதி (சனிக்கிழமை) வருவதால், அன்றைய தினம் விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழக அரசு ஆண்டுதோறும் வெளியிடும் அரசு விடுமுறைப் பட்டியலில் மொஹரம் அக்டோபர் 23-ஆம் தேதி எனவும், அன்றைய தினமே அரசு விடுமுறை எனவும் தெரிவித்திருந்தது.
இது குறித்து, தமிழக அரசின் பொதுத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அரசு தலைமை ஹாஜியின் தகவலைத் தொடர்ந்து, மொஹரம் விடுமுறை தேதி மாற்றப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் ஆண்டு மொஹரம் மாதத்தில் தொடங்குகிறது.
மொஹரத்தின் முதல் நாள் என்பது வானில் தெரியும் முழு நிலவைப் பொருத்தே கணக்கிடப்படுகிறது. நிலவு தெரியும் நாள் முதல் நாள் எனவும், அந்த நாளில் இருந்து 10-ஆவது நாளே மொஹரம் நாள் என்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.
நிலவு தெரிந்தது எப்போது?: தமிழகத்தில் முழு நிலவு தெரிந்தது கடந்த 14-ஆம் தேதியாகும். எனவே, அன்றைய தினத்தில் இருந்து பத்தாவது நாளான அக்டோபர் 24- ஆம் தேதி மொஹரம் கடைபிடிக்கப்படுவதால், அன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக தலைமைக் காஜி கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று, வரும் 24-ஆம் தேதியன்று மொஹரம் கடைப்பிடிக்கப்படும். அன்றைய தினமே அரசு விடுமுறை விடப்படும்.
அக்டோபர் 13-ஆம் தேதியன்று முழுநிலவு தெரியும் என்று முன்னர் கணக்கிடப்பட்டதால், மொஹரம் வரும் 23-ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
முழு நிலவு தெரிந்த தேதி மாறியதால், இப்போது மொஹரம் வரும் 24ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

அப்துல் கலாமின் வீட்டில் இருந்து அவரது பொருட்கள் அகற்றம்

மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வீட்டில் இருந்து அவரது பொருட்கள் அகற்றப்பட்டு வருகின்றன. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், தில்லியில் ராஜிஜி மார்க் இல்லத்தில் வசித்து வந்தார்.
கடந்த ஜூலை 27-ம் தேதி மாரடைப்பால் அப்துல் கலாம் காலமானார். இதையடுத்து அப்துல்கலாம் தில்லியில் வாழ்ந்த வீட்டை வருகிற 31-ம் தேதிக்குள் காலி செய்து தருமாறு அவரது தனி உதவியாளர்களிடம் மத்திய நகர்புற மேம்பாடு அமைச்சகம் கேட்டுக் கொண்டு, அதற்கு நோட்டீசும் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், கலாம் வாழ்ந்த இல்லத்தில் இருந்த அவரது புத்தகங்கள், பயன்படுத்திய பொருட்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. அவை அனைத்தும், கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிகிறது.

Monday 19 October 2015

உள்நாட்டில்தான் கருப்புப் பணம் அதிகம்: எஸ்ஐடி

"வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைவிட உள்நாட்டில்தான் அதிக அளவில் கருப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது' என்று சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) துணைத் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி அரிஜித் பசாயத் தெரிவித்தார்.
ஒடிஸா மாநிலம், கட்டக்கில் மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள் பங்கேற்ற உயர்நிலை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று அரிஜித் பசாயத் பேசியதாவது: வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைவிட உள்நாட்டில்தான் அதிக அளவில் கருப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் கருப்புப் பணம் உருவாகாமல் தடுக்க வேண்டும்.
சில அறக்கட்டளைகளும், கல்வி நிறுவனங்களும் ரகசியமாக பெரிய அளவில் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இவை மிகத் தீவிரமான குற்றச்சாட்டுகளாகும். இதுதொடர்பாக சிபிஐ, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன. ஒரு சில விவகாரங்களில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுரங்க முறைகேடுகள் தொடர்பாக ஒடிஸா, கோவா, பெங்களூருவில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது என்றார்.

Sunday 18 October 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 18/10/2015

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

நமதூர் நடுத்தெரு மூ.இ.அ முஹம்மது அபுசாலிஹ் அவர்கள் மௌத்.

அன்னாரின் ஜனாசா 19/10/2015 அன்று திங்கள் காலை 9 மணிக்கு நமது மூஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Saturday 17 October 2015

வணிகவரித்துறையில் 78 பதிவுரு எழுத்தர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Friday 16 October 2015

கலாம் வரலாறு அல்ல, இந்திய இளைஞர்களின் எதிர்காலம்: விஞ்ஞானி பொன்ராஜ் பேச்சு

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு முன்னாள் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவில் அவர் பேசியதாவது:
 நம் நாட்டில் வாழும் 64 கோடி இந்திய இளைஞர்களின் மனதில் அப்துல் கலாம் குடியிருக்கிறார். ஈரோடு புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தியதன் மூலம் கலாமின் மனதில் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரனும் இடம் பிடித்துள்ளார்.
 அப்துல் கலாமுக்கு நெருக்கமான வெகு சில நண்பர்களில் தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும் ஒருவர். சென்னையில் முதன் முதலில் அப்துல் கலாமுக்கு விழா எடுத்து சிறப்பித்தப் பெருமை தினமணி நாளிதழுக்குதான் உண்டு.
 லட்சியங்கள் பெரிதாக இருக்க வேண்டும். சிறியதாக எண்ணுவது குற்றம். எண்ணுவது பெரிதாக எண்ண வேண்டும். எந்தச் செயலைச் செய்தாலும் அந்தச் செயல் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கலாம் அடிக்கடி சொல்வார்.
 ராமேசுவரத்தில் பிறந்த 10 வயது சிறுவனின் கனவு இன்று இந்திய தேசத்தின் கனவாக மாறியுள்ளது. அவர் பள்ளி மாணவராக இருந்தபோது, ஒரு பறவை எப்படிப் பறக்கிறது என அவரது ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் பாடம் நடத்தியபோது, நமது வாழ்விலும் பறக்க வேண்டும் என்ற லட்சியக் கனவு அவருக்குள் பிறந்தது.
 அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் திருச்சி கல்லூரியில் இயற்பியலும், சென்னை எம்.ஐ.டி.யில் ஏரோநாட்டிக்கல் படிப்பும் படித்தார். அவர் ஏரோநாட்டிக்கல் படிப்பு படித்தபோது, அந்தப் படிப்புக்கு இந்தியாவில் வேலை இல்லாத நிலை இருந்தது. இதைப் படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்காது என்று தெரிந்திருந்தும், தனது லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காக அவர் ஏரோநாட்டிக்கல் படிப்பு படித்தார்.
 ஏரோநாட்டிக்கல் படித்து முடித்தவுடன் விமான ஓட்டி (பைலட்) பணிக்காக, அவர் தேர்வை எதிர்கொண்டார். ஆனால், அதில் அவர் தேர்வு பெறவில்லை. மனம் தளர்ந்த அப்துல் கலாம் ரிஷிகேஷத்தில் உள்ள சிவானந்தர் ஆசிரமத்துக்கு சென்று, சுவாமி சிவானந்தரைச் சந்தித்தார். அவர், "உனக்காக விதிக்கப்பட்டிருந்த ஒரு லட்சியம் காத்துக் கொண்டு இருக்கிறது. அது வெல்லும்' என்ற நம்பிக்கையை அவருக்கு அளித்தார்.
 இதன் தொடர்ச்சியாக டிஆர்டிஓவில் அறிவியல் உதவியாளர் பணி அப்துல் கலாமுக்கு கிடைத்தது. அப்போது அவர் உருவாக்கிய பறக்கும் இயந்திரம்தான் இப்போது நமது கடல்பகுதியை பாதுகாக்கும் பணியைச் செய்து வருகிறது. 
 இந்தியாவின் முதல் ராக்கெட்டை வடிவமைத்து, ரோகிணி என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவியதன் மூலம், உலகில் இந்த வல்லமை பெற்ற 4-ஆவது நாடாக இந்தியா மாறியது. அதன்பின் சந்திரயான், மங்கள்யான் போன்றவை முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றன. 
 ஒரு காலத்தில் நமது நாட்டை ஆண்ட பிரிட்டனின் செயற்கைக்கோளை இந்தியா ஏவச்செய்யும் நிலை இப்போது உருவாகியுள்ளது. இதற்கெல்லாம் அப்துல் கலாமின் கனவுதான் காரணம். 
 இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கலாமிடம் பொறுப்பு அளிக்கப்பட்டது. ஓராண்டு கடுமையான உழைப்பின் காரணமாக, 5 ஏவுகணைகள் தயாரிக்கத் திட்டம் வகுக்கப்பட்டது. இந்த ஏவுகணை 5,000 கிலோ மீட்டரைத் தாண்டி எப்போது செல்லும் என்று கலாமிடம் அப்போதைய பிரதமர் இந்திரா கேட்டார். அக்னி-5 ஏவுகணையை நாம் ஏவும்போது, இந்த இலக்கை நாம் அடைய முடியும் என்றார் கலாம்.
 இன்று அக்னி- 5 ஏவப்பட்டபோது, அது 5,000 கிலோ மீட்டரை தாண்டி, 8,000 கி.மீ. வரை பாயக் கூடிய வல்லமை பெற்றதாக உள்ளது. இப்போது நமது நாட்டின் மீது எந்த நாடு அணுகுண்டு போட்டாலும், அதை வானத்திலேயே அழித்து, நாட்டைக் காக்கும் வல்லமை நமக்கு வந்துள்ளது.
 அணுகுண்டுகளைக் கொண்டு மற்ற நாடுகள் மிரட்டிய நிலையில், உலக நாடுகள் இந்தியாவை ஆயுதச் சந்தையாக மாற்றியிருந்த நிலையில், விண்வெளியில் பல சாதனைகளைச் செய்து ஏவுகணை, அணுகுண்டு என பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்து இந்தியாவின் பாதுகாப்பை அப்துல் கலாம் பலப்படுத்தினார்.
 இந்தப் பணியை முடித்தபின் அவர் பதவி விலக விரும்பியபோது, அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் விரும்பவில்லை. அதன் பின், பிரதமராக வந்த வாஜ்பாயும், மத்திய அமைச்சருக்கு இணையான கௌரவத்துடன் பாதுகாப்பு ஆலோசகர் பதவியைக் கொடுத்து அவரைப் பயன்படுத்திக் கொண்டார்.
 இந்தக் காலகட்டத்தில் பிகாரில் 2,500 ஹெக்டேரில் விஞ்ஞானிகள், வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர்களைக் கொண்டு இயற்கை விவசாயம் செய்து இரண்டாம் பசுமைப் புரட்சிக்கு கலாம் வித்திட்டார். அவரது இந்த முயற்சியால் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 2 டன் நெல் விளைந்த நிலை மாறி அது 5 டன்னாக உயர்ந்தது. 3 டன் கோதுமை விளைச்சல் 7 டன்னாக உயர்ந்தது.
 அத்துடன் 2020-இல் இந்தியா வல்லரசாக 25 துறைகளில் அறிக்கை தயாரித்து, "விஷன் 2020' என்ற திட்டத்தை அப்துல் கலாம் வகுத்தார். அதை நாட்டின் தேசியக் கொள்கையாக அப்போதைய பிரதமர் அறிவித்தார். இதுபோன்ற அப்துல் கலாமின் சாதனைகளால், உலக நாடுகள் நம்மை மிரட்டுவதை விட்டு விட்டு, வர்த்தகம் செய்ய முன் வந்தன. 
 இந்தியாவை 2020-இல் வல்லரசாக மாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு லட்சம் மாணவர்களைச் சந்தித்து, அவர்களிடம் இதை விதைக்க கலாம் புறப்பட்டார். அடுத்த 20 ஆண்டுகளில் ஆட்சிகள் பல முறை மாறியிருக்கக் கூடும். ஆனால், இப்போது நான் சந்திக்கும் மாணவர்கள், வளரும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களைச் சந்தித்தால் அவர்கள் நாளைய இந்தியாவை உருவாக்கும் சிற்பியாக இருப்பார்கள் என்று கூறி 6 மாதத்தில் ஒரு லட்சம் மாணவர்களைச் சந்தித்துப் பேசினார்.
 இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியை ஏற்ற பின்பும் மாணவர்களைச் சந்தித்து ஊக்கப்படுத்துவதை அப்துல் கலாம் விடவில்லை. உலகில் இரண்டரைக் கோடி மாணவர்களைச் சந்தித்து உரையாடி, உறுதிமொழி எடுக்கச் செய்தவர் கலாம் மட்டுமே.
 அவர் இறந்த காலம் குறித்து சிந்திக்கவில்லை; எதிர்காலம் குறித்து சிந்தித்தார். கலாம் வரலாறு மட்டுமல்ல, இந்திய மாணவர்களின் எதிர்காலம்.
 இந்தியா எரிசக்தி சுதந்திரம் பெற்ற நாடாக 2030-இல் மாற வேண்டும் என அப்துல் கலாம் விரும்பினார். சூரியச் சக்தியைப் பெற்று எரிசக்தியாக அதை எப்படி பயன்படுத்துவது என்ற திட்டம் வகுத்தார்.
 இந்தியா மட்டுமல்லாது, உலக நாடுகள் ஒன்றிணைத்து இந்தத் திட்டத்தை 2050-க்குள் சாத்தியப்படுத்த முடியும் என்று அவர் நம்பினார். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் 8 மணி நேர சூரிய ஒளியைக் கொண்டு ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு 24 மணி நேரத்துக்கு மின்சாரம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் சிறப்பை உணர்ந்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் இந்தத் திட்டத்தை கலாம் பெயரில் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. 
 இளைஞர்கள் எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும், அந்தத் துறையில் தலைமைப் பண்பைப் பெற வேண்டும் என்பது கலாமின் கனவு. நான் அடுத்தவர்களுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய முடியும் என்று சிந்திக்கிற பக்குவத்தை இளைஞர்கள் பெறும்போதுதான், இந்தியா வெல்லும் என்று கலாம் நம்பினார். 
 பிறப்பு நிகழ்வாக இருக்கலாம்; வாழ்வு சரித்திரமாக இருக்க வேண்டும் என்ற கலாமின் லட்சியத்தை இளைஞர்கள் மனதில் கொள்ள வேண்டும் என்றார் பொன்ராஜ்.
 இந்த நிகழ்ச்சியில், 100 சிறந்த இளம் அறிவியலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டப்பட்டனர்.
 
 



4திட்டங்களுக்கு மட்டும் ஆதார் எண்ணைப் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி


மறு உத்தரவு வரும் வரை அரசுத் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மாற்றக் கோரும் மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. அதில், மறு உத்தரவு வரும் வரை அரசுத் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது.
மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
100 நாள் வேலை உறுதி திட்டம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, ஜன் தன் திட்டம் என மத்திய அரசின் 4 திட்டங்களுக்கு ஆதார் எண்ணைப் ப

Thursday 15 October 2015

1863 பணியிடங்களுக்கான குரூப் 2ஏ தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் உதவியாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் உள்ளிட்ட 1,863 ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகளுக்கான (குரூப் 2ஏ) எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
 இந்தத் தேர்வு டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு நேர்முகத் தேர்வு கிடையாது.
 இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
 ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை (403), மருத்துவம், கிராம சுகாதாரப் பணிகள் (213), பதிவுத் துறை (59), வணிக வரித் துறை (191), சுகாதாரத் துறை (136), பள்ளிக் கல்வி இயக்ககம் (76), தலைமைச் செயலக நிதித் துறை (26), தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (62), மீன்வளத் துறை (45), போக்குவரத்துத் துறை (35) உள்ளிட்ட துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள், கூட்டுறவுத் துறையில் உள்ள இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் (308) பணியிடங்கள் என மொத்தம் 1,863 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 இந்தப் பணியிடங்களுக்கு இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
 இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 11 ஆகும். விண்ணப்பக் கட்டணம் (நிரந்தர பதிவுக் கட்டணம்) ரூ.50. தேர்வுக் கட்டணம் ரூ.75.
 இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 116 மையங்களில் டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பாடத்திட்டம், தேர்வுத் திட்டம் ஆகியவை தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
 இதுகுறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 18004251002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
 வயது வரம்பு: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18 ஆகும். பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது 30 ஆகும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி. (ஏ), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), கைவிடப்பட்ட விதவைகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
 அனைத்துப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிப்பதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அந்தந்தப் பணியிடங்களுக்கு உரிய பட்டப் படிப்புகள் குறித்த விவரங்கள் அறிவிப்பாணையில் வழங்கப்பட்டுள்ளன.

Wednesday 14 October 2015

Kodikkalpalayam -ஹிஜ்ரி 1437 இஸ்லாமிய வருடப்பிறப்பு




 வல்ல இறைவனின் அருளால் இனிய முஹர்ரம் பிறையை கொண்டு இனிய புத்தாண்டு ஹிஜ்ரி ஆண்டு 1437 அடைந்த அனைவருக்கும் வளமும் நலமும் கொண்டு ஆற்றல் மிக்க ஆண்டாக அமைய பிராத்திக்கிறோம் ..ஆமீன்  ..


உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து கொடிநகர் டைம்ஸ் நண்பர்களுக்கும் எங்கள் இனிய இஸ்லாமிய வருடப்பிறப்பு ஹிஜ்ரி 1437 நல்வாழ்த்துகள் .... .

Tuesday 13 October 2015

சூரிய ஒளி மின்சாரத்தை 90 சதவீதம் பயன்படுத்த வாய்ப்பு: கட்டணம் பெருமளவு குறையும் என்பதால் பொதுமக்கள் ஆர்வம்- 3 ஆயிரம் பேர் மானியம் பெற்றனர்













வீடுகளில் உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தில் 90 சதவீதத்தை அவர்களே பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் தமிழகத்தில் சூரிய மின் அமைப்புகளை நிறுவு வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் தற்போது 12 ஆயிரம் காற்றாலைகள் மூலம் 7 ஆயிரத்து 500 மெகாவாட்டும், சூரிய ஒளி மூலம் 120 மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வசதி உள்ளது. தமிழக அரசு கடந்த 2012-ல் சூரிய ஒளி மின் உற்பத்தியை அதிகரிக்க ‘சூரிய மின்சக்தி கொள்கை’யை வெளியிட்டது.
இதன்படி சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் போடப் பட்டு வருகின்றன. தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மட்டுமின்றி வீடுகள் மற்றும் அரசு, தனியார் அலுவலகங்களிலும் சூரிய ஒளி மின் உற்பத்தி அமைப்புகள் நிறுவப் படுவதை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.
வீடுகளைப் பொறுத்தவரை, சூரிய ஒளி மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவும்போது மத்திய, மாநில அரசுகளின் மானியமும் கிடைக்கிறது. இதுகுறித்து எரிசக்தித்துறை அதிகாரி ஒருவர் ’தி இந்து’விடம் கூறியதாவது:
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்புப்படி, வீடுகளில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தில் 90 சதவீதத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற் காக அந்த வீடுகளுக்கு மின்வாரி யம் சார்பில் ரிவர்ஸ் மீட்டர் வழங்கப் படுகிறது. இதனால் பொதுமக்கள் ஆர் வத்துடன் சூரிய ஒளி மின் அமைப்பை நிறுவி வருகின்றனர்.இந்த வகையில் இதுவரை 7ஆயிரம் பேருக்கு மீட்டர் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 3 ஆயிரம் பேர் மானியம் பெற்றுள்ளனர்.
விதிமுறைகள்
உயரமான கட்டிடங்களில் சூரிய ஒளி மின் அமைப்பை நிறுவுவது கட்டாயம் என சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இது தொடர்பாக வீட்டுவசதித்துறை அதிகாரிகள் சமீபத்தில் எரிசக்தித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். விரைவில் வீட்டு வசதித் துறை சார்பில் இதற்கான விதிமுறை கள் வகுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
90 சதவீதம் பயன்படுத்துவது எப்படி?
ஒரு வீட்டுக்கு ஒரு நாள் தேவை 10 யூனிட் மின்சாரம் எனில், அதில் 9 யூனிட்டை சூரிய ஒளி மூலம் பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள ஒரு யூனிட்டை மின்வாரிய தொடரமைப்பில் இருந்து பயன்படுத்த வேண்டும்.
பகலில் ஆட்கள் இல்லாத வீடுகளில் பகல் வேளையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, மின்வாரியத்துக்கு அளித்துவிட்டு, இரவு நேரத்தில் அந்த அளவு மின்சாரத்தை தொடரமைப்பில் இருந்து பெற்றுக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக மீட்டர் வழங்கப்படுகிறது. இதன் மூலம், மின்வாரியத்துக்கு உற்பத்தி தொடர்பான பாரம் குறையும். பொதுமக்களுக்கும் கட்டணம் குறையும் என எரிசக்தித்துறை அதிகாரி தெரிவித்தார்.

Monday 12 October 2015

வாக்காளர்கள் பெயர் சேர்க்க 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தகவல்


















வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை இம்மாதம் 24-ம் தேதி வரை அளிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன வசதிகள் குறித்தும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக முடிந்துள்ள இரண்டு முகாம்கள் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கல், இடமாறுதல் தொடர்பாக 14 லட்சத்து 45 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இறுதி மற்றும் 3ம் கட்ட முகாம் 11-ம் தேதி (நாளை) நடக்கிறது.
தாலுகா அலுவலகங்களில் நேரிலும், இணைய வழியிலும் விண்ணப்பங்கள் இம்மாதம் 14-ம் தேதி இறுதிநாளாக இருந்தது.
அரசியல் கட்சிகள் கேட்டுக் கொண்டதால் இறுதிநாள் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பான சேவைகளை பெற இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் ‘ஈசி- Electoral Assistnce SYstem’ எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இதில், வாக்காளர்கள் தங்கள் விவரங்களை சரிபார்த்து தவறுகளை திருத்தலாம். இத்திட்டப்படி, ஆண்ட்ராய்டு செயலி, தலைமை தேர்தல் அதிகாரியின் www.elections.tn.gov.in இணையதளம், 9444123456 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புதல் மற்றும் 044-66498949 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து சேவைகளை பெறலாம்.
இதன் மூலம், வாக்காளர்கள் தங்கள் விண்ணப்பத்தின் ஒவ்வொரு நிலை குறித்தும் அறிந்து கொள்ள முடியும். மேலும், வாக்குச்சாவடி அலுவலர் மூலம் உடனடியாக சம்பந்தப்பட்ட வாக்காளர் விவரங்களை சரிபார்க்கவும் புதிய வசதிகள் தமிழகத்தில் முதல்முறையாக செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, தேர்தல் துறையின் www.elections.tn.gov.in என்ற இணையதளம் எளிமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில், தமிழில் விண்ணப்பிக்கலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் ஒருவர் பெயர் ஒரே தொகுதியி்ல் பல இடத்தில் இருப்பது, புகைப்படம் மாறியிருப்பது, புகைப்படம் தெளிவில்லாமல் இருப்பது குறித்த உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டு, 32 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
விசாரித்து நடவடிக்கை
அவர்கள், வாக்குச்சாவடி அலுவலர் மூலம் வாக்காளரை நேரடியாக சந்தித்து, பட்டியலை சரிசெய்வார். பெயர் நீக்கம் குறி்த்து புகார்கள் வந்தால், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Sunday 11 October 2015

திருவாரூர் ஆழித்தேர் வெள்ளோட்டம்: அக்.26-ல் உள்ளூர் விடுமுறை

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் வெள்ளோட்டத்தையொட்டி அக்.26-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட் சியர் எம். மதிவாணன். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேர் மற்றும் சுப்ரமணியா் தேர் திருவிழா வௌ்ளோட்டம் அக்.26-ல் நடைபெறுகிறது. விழா வையொட்டி தமிழக அரசு நிலை ஆணை எண் 154 பொது (பல்வகை)துறை நாள் 3.9.2009-ல் அனுமதி அளிக்கப்பட்டபடி திருவாரூர் மாவட்டத்துக்கு அக்.26-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு, இதனை சரிசெய்யும் வகையில் அக்.31-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. 

உள்ளூர் விடுமுறை நாள் அக்.26-ல் அரசு கருவூல மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசின் அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறைந்தபட்ச பணியாளா்களை கொண்டு செயல் படும்