Sunday 11 October 2015

சாலையில் ஏற்பட்ட மண் அரிப்பு சீரமைப்பு












சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இதில் திருத்துறைப்பூண்டி சிங்களாந்தி அருகே உள்ள சாலையின் கீழ் பகுதியில் வேதாரண்யம் செல்லும் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் பெய்த மழையால் இந்த பாலத்தின் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு 3 இடங்களில் பள்ளம் விழுந்தது. இதனால் கேரளா, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்செந்தூர், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, சென்னை செல்லும் வாகனங்கள் இரவு நேரங்களில் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு சாலை ஆய்வாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று 3 இடங்களில் ஏற்பட்ட மண்அரிப்பை மண் மூட்டைகளை அடுக்கி சீரமைத்தனர். மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண் மூட்டைகளை தயார் செய்து மழை நேரங்களில் ஏற்படும் பள்ளங்கள் சீரமைக்கப்படும் என உதவி கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்தார். 

No comments:

Post a Comment