Monday 5 October 2015

மலேசியாவில் கடும் புகைமண்டலம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன










EPA

மலேசியாவில் பரவியுள்ள கடும் புகைமண்டலம் காரணமாக அனேகமாக எல்லா பள்ளிக்கூடங்களையும் 2 நாட்களுக்கு மூடிவிடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மலேசியாவில், மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு பரவியுள்ள கடும் புகைமண்டலம் காரணமாக அனேகமாக எல்லா பள்ளிக்கூடங்களையும் இரண்டு நாட்களுக்கு மூடிவிடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்தப் புகைமூட்டத்தால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய பாதிப்புகள் காரணமாக சிங்கப்பூரில் உள்ள பள்ளிக்கூடங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன.
இந்தோனேசியாவில் தணலாக எரிந்துகொண்டிருக்கும் காய்ந்த சருகுகளால் பரவும் தீ தான் இந்த பெரும்புகை மண்டலம் உருவாகக் காரணம்.
ஒவ்வொரு ஆண்டும் அண்டை நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தக்கூடிய விடயமாகவும் இது மாறியுள்ளது.
இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள இந்த புகைமாசு தான் முன்னெப்போதையும் விட மிக மோசமானதாக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அனேமான இடங்களில் 50 மீட்டருக்கும் குறைவான தூரமே கண்ணுக்குத் தெரியக்கூடிய நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment