Sunday 11 October 2015

திருவாரூர் ஆழித்தேர் வெள்ளோட்டம்: அக்.26-ல் உள்ளூர் விடுமுறை

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் வெள்ளோட்டத்தையொட்டி அக்.26-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட் சியர் எம். மதிவாணன். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேர் மற்றும் சுப்ரமணியா் தேர் திருவிழா வௌ்ளோட்டம் அக்.26-ல் நடைபெறுகிறது. விழா வையொட்டி தமிழக அரசு நிலை ஆணை எண் 154 பொது (பல்வகை)துறை நாள் 3.9.2009-ல் அனுமதி அளிக்கப்பட்டபடி திருவாரூர் மாவட்டத்துக்கு அக்.26-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு, இதனை சரிசெய்யும் வகையில் அக்.31-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. 

உள்ளூர் விடுமுறை நாள் அக்.26-ல் அரசு கருவூல மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசின் அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறைந்தபட்ச பணியாளா்களை கொண்டு செயல் படும்

No comments:

Post a Comment