Tuesday 6 October 2015

தமிழக அரசின் வாட்ஸ் அப் செய்திகள்

   
பொதுமக்களிடம் விரைவாக சென்றடையும் வகையில் வாட்ஸ்–அப்பில் தமிழக அரசு செய்திகள் வெளியிடப்படுகிறது.
கூடுதல் சேவைதமிழக அரசின் செய்தி வெளியீட்டு பிரிவு சார்பில் வெளியிடப்படும் செய்திகள், சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் காலங்களில், முதல்–அமைச்சர் 110 விதியின் கீழ் வெளியிடும் அறிக்கைகள் மற்றும் கடிதங்கள் ஆகியவற்றை, வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்பத்திற்கேற்றவாறு, விளம்பர பணியின் முக்கியத்துவத்தை கருதி, கூடுதல் சேவையாக வாட்ஸ்–அப் மூலமாக அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போதைய காலக்கட்டத்தில் செல்போனை பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள், குறிப்பாக ஊடகவியலாளர்கள், சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், முக்கிய வணிக தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட இளம் தலைமுறையினர் என பல்வேறு தரப்பினரும் செல்போனில் ‘ஆன்ட்ராய்டு’ வசதி மூலம் வாட்ஸ்–அப் வாயிலாக எவ்வித காலதாமதமும் இன்றி, எவ்வித கட்டணமும் இன்றி, முழுக்க முழுக்க இலவசமாக உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர்.
வாட்ஸ்–அப் மூலம் செய்திஇதனடிப்படையில், முதல்–அமைச்சரின் அன்றாட அறிவிப்புகள், மக்கள் நல திட்டங்கள், அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்த செய்திகளை வாட்ஸ்–அப் வாயிலாக அனுப்பப்பட்டு வருகிறது.
இதன் மூலம் அரசின் செய்திகளை மேற்குறிப்பிட்ட ஏராளமான அமைப்புகள் வாட்ஸ்–அப் வாயிலாக உடனுக்குடன் செய்திகளை அறிந்து அவைகளை அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள மற்றவர்களுக்கு பரிமாறிக்கொள்ளும்போது, செய்திகள் எண்ணற்ற பொதுமக்களை விரைவாகவும், மிக எளிதாகவும் சென்றடைகிறது. அதன் வாயிலாக பொதுமக்கள் அரசின் செய்திகளை அறிந்து பயன்பெற நல்லதொரு வாய்ப்பு ஏற்படுகிறது.
செய்தி துறை நடவடிக்கைமேலும், வாட்ஸ்–அப் மூலம் அரசின் செய்திகளை ஒருவர் பெறும்போது, தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களைவிட மிக விரைவாக அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்கள் வசம் உள்ள செல்போன் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
இதன் வாயிலாக செய்திகளை ஊடக நிறுவனங்களும் மற்றும் அதன் தொடர்புடைய ஊடகப் பிரதிநிதிகளும் அவரவர் பணி நிமித்தமாக எந்த இடத்தில் இருந்தாலும், அங்கேயே அப்போதே செய்திகளை வாட்ஸ்–அப் மூலமாக மிக விரைவில் அறிந்துகொள்ள இயலும்.
மேலும் படிப்படியாக இந்த வசதி பெற்ற செல்போன் உள்ளவர்களுக்கு வாட்ஸ்–அப் மூலம் செய்தி அனுப்ப செய்தி துறை நடவடிக்கை எடுத்து வருவது சிறப்பு அம்சமாகும்.

No comments:

Post a Comment