Sunday 4 October 2015

விமான நிலையத்தில் கண்ணாடி மீண்டும் உடைந்தது


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், பன்னாட்டு முனையப் பகுதியில் தடுப்புக் கண்ணாடி வெள்ளிக்கிழமை மீண்டும் உடைந்து விழுந்தது.
இங்கு நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு, பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன. இதுவரை 13 முறை மேற்கூரைகளும், 17 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 14 முறை தடுப்புக் கண்ணாடிகளும், 5 முறை சுவரில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும், ஒரு முறை விளக்கு கண்ணாடியும் என இதுவரை 50-க்கும் மேற்பட்ட முறை உடைந்து விழுந்துள்ளன. இந்தச் சம்பவங்களில் 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், பன்னாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் 1-வது நுழைவு வாயில் அருகே மேலாளர் அறையும், லிப்ட்டும் உள்ளன. இதன் அருகே உள்ள 6 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட தடுப்புக் கண்ணாடி வெள்ளிக்கிழமை திடீரென உடைந்து விழுந்தது. அந்த வழியே யாரும் வராததால், பாதிப்பு ஏதுமில்லை.
தகவலறிந்து அங்கு விரைந்த ஊழியர்கள் நொறுங்கிக் கிடந்த கண்ணாடி சிதறல்களை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து விசாரணை நடக்கிறது.

No comments:

Post a Comment