Saturday 10 October 2015

ஹஜ் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது

சவூதி அரேபியாவின் மெக்கா அருகே மினாவில் அண்மையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்திய ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்தியர்களை அடையாளம் காண்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் சவுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு மேலும் 20 இந்தியர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது. இதனையடுத்து, பலியான இந்தியர்கள்  எண்ணிக்கை தற்போது 101 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment