Wednesday 7 October 2015

பொதுமக்களின் வசதிக்காக அக்டோபர் 11-ல் மீண்டும் வாக்காளர் சிறப்பு முகாம்


 இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணி மேற்கொள்வது தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
 முதல் முகாமில் 5.53 லட்சம் மனுக்களும், 2-ஆவது முகாமில் 8.4 லட்சம் மனுக்களும் அளிக்கப்பட்டன. இவற்றில், பெயர் நீக்கலுக்காக மட்டும் சுமார் 60 ஆயிரம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்களைத் தவிர்த்து, அலுவலக வேலை நாள்களில், 51 ஆயிரத்து 897 பேர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.
 இந்த நிலையில், திருத்தம் பணி மேற்கொள்வதற்காக மீண்டும் ஒரு வாய்ப்பாக ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
மனுக்கள் குறித்து வாக்காளர்களுக்கு குறுந்தகவல்: இந்தப் பணிகள் குறித்து, வரும் 9-இல் காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளேன். வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், நீக்கவும் அளிக்கப்பட்ட மனுக்கள் குறித்து என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பாக, மனுதாரர்களுக்கு செல்லிடப்பேசி மூலமாகத் தகவல் தெரிவிக்கப்படும்.
 இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் கவனத்துக்கு...: ஜனவரி 5-இல் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. எனவே, பெயர் சேர்ப்பு, நீக்கல் உள்ளிட்ட பணிகளுக்காக அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நவம்பர் 24-க்குள் இறுதி செய்யப்படும்.
 இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
 எனவே, வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை சரிபார்த்துக் கொள்வது அவசியம் என்றார் சந்தீப் சக்சேனா.

No comments:

Post a Comment