Friday 9 October 2015

தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில் புதன்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அண்மையில் மாட்டு இறைச்சி சாப்பிட்டதாக முதியவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவாரூர் ரயில் நிலையம் முன் தவ்ஹீத் ஜாமஅத் சார்பில் மாவட்டத் தலைவர் பீர்முகமது தலைமையில் 400-க்கும் மேற்பட்டவர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜிநாமா செய்ய வேண்டும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

No comments:

Post a Comment