Tuesday 31 May 2016

ஓரிரு நாள்களில் வெப்பத்தின் தாக்கம் குறையும்


 
தமிழகம், புதுச்சேரியில் ஜூன் முதல் வாரத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் மே 4 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்றது. கத்திரி வெயில் முடிந்தும் வெப்பத்தின் தாக்கம் நீடித்து வருகிறது. தமிழகம், புதுச்சேரியில் திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, பத்து இடங்களில் 100 சதவீதத்துக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. 
 கோடை மழை: வெப்பச் சலனம் காரணமாக, சில இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 40 மி.மீ, பெரம்பலூர் வெண்பாவூரில் 20 மி.மீ., திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 10 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
 வெப்பம் நீடிக்கும்: கோடைக்காலம் என்பதால் வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும். கத்திரி வெயில் காலத்தில் இருந்ததைப்போல் அல்லாமல், அதிலிருந்து 1 அல்லது 2 டிகிரி வெப்பம் குறைந்து காணப்படும். சராசரி வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும்.
 இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
 கேரளத்தில் தென்மேற்கு பருவமழைக்கான காலநிலை உருவாகும்போது, தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைய வாய்ப்புள்ளது. ஜூன் முதல் வாரத்தில் கேரளத்தில் தென்மேற்கு பருவமழைக்கான காலநிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும். கேரள எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என்றனர்.
 திங்கள்கிழமை பதிவான வெப்ப அளவு(ஃபாரன்ஹீட்டில்):
 சென்னை, புதுச்சேரி, திருச்சி, வேலூர் 102
 மதுரை, கடலூர் 101
 கரூர் பரமத்திவேலூர், நாகப்பட்டினம் 100
 பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை 100

No comments:

Post a Comment