Friday 27 May 2016

திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் முதல் நாளில் 82 விண்ணப்பங்கள் விற்பனை


திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் முதல் நாளான வியாழக்கிழமை 82 விற்பனையாகின.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை வியாழக்கிழமை (மே 26) தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல் நாளான வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 82 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் 47 விண்ணப்பங்கள் பொதுப் பிரிவிலும், 35 விண்ணப்பங்கள் இலவசமாகவும் விநியோகம் செய்யப்பட்டன.
மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். விண்ணப்பங்கள், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு ரூ. 500-க்கு விற்கப்பட்டன. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இலவசமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment