Monday 16 May 2016

தஞ்சாவூர் தொகுதி தேர்தல் ஒத்திவைப்பு: மே 23-இல் வாக்குப்பதிவு


தேர்தல் விதிமீறல் புகார்களைத் தொடர்ந்து. தமிழகத்தில் தஞ்சாவூர் தொகுதிக்கு திங்கள்கிழமை (மே 16) நடைபெறவிருந்த தேர்தலை வரும் 23-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு திங்கள்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தல் விதிமீறல் புகாரைத் தொடர்ந்து, அரவக்குறிச்சியில் தேர்தல் தேதியை வரும் 23-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சனிக்கிழமை (மே 14) தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, மற்றொரு தொகுதியான தஞ்சாவூரிலும் தேர்தல் விதி மீறல் புகார்களைத் தொடர்ந்து, தேர்தல் தேதியை மே 23-ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் தள்ளிவைத்து ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை மே 25-ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணைய உயரதிகாரி தெரிவித்தார்.
மாவட்டத் தேர்தல் அதிகாரி, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோர் அனுப்பிய பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
தஞ்சாவூர் தொகுதியில் முக்கியக் கட்சிகள் வரிசையில் அதிமுக சார்பில் ரங்கசாமி, திமுக சார்பில் அஞ்சுகம் பூபதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் அதிமுக-திமுக இடையேதான் நேரடி போட்டி காணப்படுகிறது.

No comments:

Post a Comment