Wednesday 18 May 2016

மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள்


திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் விவரம்.
முதலிடம்: முத்துப்பேட்டை ரஹமத் மெட்ரிக் பள்ளி மாணவி எஸ். காவியா. இவர் தமிழ் 189, ஆங்கிலம் 194, பொருளியல் 199, கணிதம் 200, கணக்குப்பதிவியல் 199, வணிககணிதம் 200 என 1181 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவரது தந்தை சேகர் ஸ்டவ் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். தாய் முத்துக்குமாரி இல்லத்தரசியாக உள்ளார். இவர் எதிர்காலத்தில் ஐஏஎஸ் ஆக விருப்பம் தெரிவித்துள்ளார். இரண்டாமிடம்: சேந்தமங்கலம் தி மெரிட் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜெ. வெங்கடேஸ்வரன். இவர் தமிழ் 196, ஆங்கிலம் 196, இயற்பியல் 194, வேதியியல் 196, உயிரியல் 197, கணிதம் 199 என 1178 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் தந்தை வி.வி. ஜெயராமன் அச்சகம் வைத்துள்ளார். தாய் சாந்தி நன்னிலத்தில் மகாஜனசபா பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர் எதிர்காலத்தில் மருத்துவராகப் படித்து இருதய நோய் சிகிச்சை நிபுணராக வரவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
மூன்றாமிடம்: மன்னார்குடி சண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர். ஐஸ்வர்யா. இவர் தமிழ் 197, ஆங்கிலம் 192, இயற்பியல் 193, வேதியியல் 197, உயிரியல் 197, கணிதம் 199 என 1175 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் எதிர் காலத்தில் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்வதே தனது விருப்பம் என்றார்.

No comments:

Post a Comment