Monday 30 May 2016

மீன்பிடி தடைக்காலம் நிறைவு: இன்று மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஏற்பாடு

மீன்பிடி தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதால், முத்துப்பேட்டை கடலோரப் பகுதி கிராமங்களில் உள்ள மீனவர்கள் திங்கள்கிழமை (மே 30) கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவுள்ளனர்.
தமிழக கடல் பகுதிகளில் இயற்கைவளம் அழிந்துவிடாமல் பாதுகாக்கும் வகையிலும், மீன்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபட  ஏதுவகாவும் ஏப். 15 முதல் மே 29 வரை 45 நாள்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க அரசு தடைவிதித்துள்ளது.
இதன்படி, கடந்த 45 நாள்களாக முத்துப்பேட்டை, துரைக்காடு, ஜாம்பவானோடை, செங்கங்காடு, வீரன்வயல்,  கற்பகநாதர்குளம், தொண்டியக்காடு, முனங்காடு, மேலத்தொண்டியக்காடு உள்ளிட்ட கடலோர மீனவக் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு  மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இந்த ஓய்வு காலத்தில் மீன்பிடி வலைகளை சீரமைத்தல்,  இயந்திரப் படகு மற்றும் கட்டுமரங்களை சீரமைக்கும் பணிகளையும் செய்து வந்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் அரசு அறிவித்த  மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதால், மீனவர்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment