Monday 23 May 2016

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பொது நுழைவுத்தேர்வை 1,056 மாணவ-மாணவிகள் எழுதினர்


திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொது நுழைவுத்தேர்வை 1,056 மாணவ-மாணவிகள் எழுதினர். 

மத்திய பல்கலைக்கழகம்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. இதில் 1,056 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 24 பாடப்பிரிவுகளுக்கான படிப்புகள் நடைபெற்று வந்தன. வரும் கல்வியாண்டில் புதிதாக 6 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன. அதன்படி பொருளியல், இந்தி மொழி, கணினிஅறிவியல், பொருள்தொழில்நுட்பவியல் ஆகிய 4 முதுகலை பாடங்களும், பி.எஸ்சி. டெக்ஸ்டைல்ஸ், இசை சம்பந்தமான 2 பாடப்பிரிவுகள் தொடங்கப்படுகின்றன.

பொது நுழைவுத்தேர்வு

இதனை தொடர்ந்து தமிழ்நாடு, அரியானா, ஜம்மு, காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 9 மத்திய பல்கலைக்கழகங்கள் இணைந்து வரும் கல்வியாண்டிற்கு மாணவர்கள் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு நடத்திட திட்டமிடப்பட்டது. இந்த நுழைவுத்தேர்வு தமிழகத்தில் திருவாரூர், சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 5 இடங்களில் நடைபெறுகிறது. அதன்படி திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. இதில் 1,056 மாணவ-மாணவிகள் தேர்வுகளை எழுதினர். இந்த நுழைவுத்தேர்வு 21/05 மற்றும் 22/05 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி பொது நுழைவுத்தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடடப்படும். 

No comments:

Post a Comment