Saturday 28 May 2016

திருவாரூர் மாவட்டத்தில் ஜூன் 3 முதல் ஜமாபந்தி தொடங்குகிறது



திருவாரூர் மாவட்டத்தில் ஜூன்.3-ம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற வுள்ளது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் வட்டத்தில் ஜூன்.3 முதல் 9-ம் தேதி வரை ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஜூன்.3 முதல் 15-ம் தேதி வரை வரை மாவட்ட வருவாய் அலுவலா் த. மோகன்ராஜ் தலைமையில், நன்னிலம் வட்டத்தில் ஜூன்.3 முதல் 15-ம் தேதி வரை கோட்டாட்சியர் இரா. முத்துமீனாட்சி தலைமையில், மன்னார்குடி வட்டத்தில் ஜூன்.3 முதல் 23-ம் தேதி வரை கோட்டாட்சியர் செல்வசுரபி தலைமையில், நீடாமங்கலம் வட்டத்தில் ஜூன் 3 முதல் 14-ம் தேதி வரை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி யினா் நல அலுவலா் தலைமையில், வலங்கைமான் வட்டத்தில் ஜூன் 3 முதல் 15-ம் தேதி வரை மாவட்ட வழங்கல் அலுவலா் தலைமையில், குடவாசல் வட்டத்தில் ஜூன் 3 முதல் 21-ம் தேதி வரை உதவி ஆணையா் (கலால்) தலைமையில் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.
மேலும் அரசு விடுமுறை நாட்கள் (சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை நீங்கலாக   நாள்தோறும் காலை 9 மணிக்கு அந்தந்த இடத்தில் ஜமாபந்தி தொடங்கப்படும். எனவே  மக்கள் சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களில் நேரில் சென்று தங்களது கோரிக்கை மனுவை அளித்து பயன்பெறலாம்.

No comments:

Post a Comment