Friday 20 May 2016

திருவாரூர் தொகுதியில் தி மு க வேட்பாளர் கருணாநிதி வெற்றி

,









திருவாரூர் தொகுதியில் கருணாநிதி 68 ஆயிரத்து 366 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை வீழ்த்தினார்.

திருவாரூரில் கருணாநிதி போட்டி
தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தல் கடந்த 16-ந்தேதி நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளர் பன்னீர்செல்வம் உள்பட 14 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி 68 ஆயிரத்து 366 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பன்னீர்செல்வத்தை வீழ்த்தினார்.

வாக்கு எண்ணிக்கை விவரம்
மொத்த வாக்குகள்- 2,53,030

பதிவானவை- 1,96,948

கருணாநிதி

(தி.மு.க.)-1,21,473

பன்னீர்செல்வம்

(அ.தி.மு.க.)- 53,107

மாசிலாமணி (இந்திய

கம்யூனிஸ்டு, மக்கள் நல

கூட்டணி)- 13,158

சிவகுமார் (பா.ம.க.)-1,787

தென்றல் சந்திரசேகரன்

(நாம் தமிழர் கட்சி)-1,427

ரெங்கதாஸ்

(பா.ஜனதா)-1,254

பத்மநாபன்

(பகுஜன் சமாஜ்)-591

மீனாட்சிசுந்தரம்

(சுயே)-481

சரவணன்(சுயே)-349

கணேசன்(தமிழக மக்கள்

முன்னேற்ற கழகம்)- 281

ராஜேந்திரன் (சுயே)-200

பன்னீர்செல்வம்

(சுயே)-198

தேவகுமார்(சுயே)-148

சுபாஷ்பாபு (அன்பு

உதயம் கட்சி)- 92

செல்வராஜ் (சுயே)-72

நோட்டா -2,177

கடந்த தேர்தலை விட கூடுதல்
தி.மு.க. தலைவர் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை 68 ஆயிரத்து 366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம் கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட 18,117 வாக்குகளை கூடுதலாக பெற்றிருக்கிறார். மேலும் கருணாநிதி, 13-வது முறையாக சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டிருப்பதும், அவரை எதிர்த்து போட்டியிட்ட 14 பேரில் அ.தி.மு.க. வேட்பாளர் பன்னீர்செல்வத்தை தவிர மற்ற 13 பேரும் டெபாசிட்டை இழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment