Saturday 28 May 2016

திருவாரூரில் இன்று மின்விநியோகம் இருக்காது


திருவாரூர் நகர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (மே.28) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பி. சந்திரசேகரன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் துணை மின்நிலையத்தில்  சனிக்கிழமை (மே.28) மாதாந்திர பராமாிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் திருவாரூர் துணை மின்நிலையம் மற்றும் கப்பல்நகா் துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் திருவாரூர் நகா் ,விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூர், முகந்தனூர், திருப்பயத்தாங்குடி மற்றும் மாவூர். அடியக்கமங்கலம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அடியக்கமங்கலம், காலணி, சிதம்பரநகா், பிலாவடி மூலை ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்பளாம்புலியூர், புதுபத்தூர், நீலப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது

No comments:

Post a Comment