Sunday 29 May 2016

ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

 


 
திருவாரூர் மாவட்ட அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பட்டயப் பயிற்சி படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ரா. மாரியப்பன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிப்பதற்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் இப்படிப்புக்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலும், மன்னார்குடி, மேலவாசலில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுப் பிரிவினருக்கான விண்ணப்பம் ரூ. 250-ஐ செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 10-ஆம் தேதி வரை அளிக்கலாம்.

No comments:

Post a Comment