Thursday 26 May 2016

திருவாரூர் மாவட்டத்தில் 10 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் திருவாரூர் மாவட்டத்தில் 10 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

கொரடாச்சேரி பள்ளி

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் திருவாரூர் மாவட்ட அளவில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ராஜலெட்சுமி, கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பாத்திமா ஆகியோர் 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றனர். திருமக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கிருபாளினி, கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பவதாரனி ஆகியோர் 487 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் கவுரிசங்கர், நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கீர்த்தனா ஆகியோர் 486 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பெற்றனர்.

10 பள்ளிகள்

இதேபோல மாவட்ட அளவில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிணி, திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஹரிபிரசாத் ஆகியோர் 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யதர்ஷினி, கூத்தாநல்லூர் மன்ப உல் உலா மேல்நிலைப்பள்ளி மாணவன் விக்ரம்ஜவகர் ஆகியோர் 494 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யஜோதி, திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் துரைசெல்வம், கூத்தாநல்லூர் மன்ப உல் உலா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோகுலகிருஷ்ணன், பிரசாந்த்ராஜ் ஆகியோர் 493 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தை பிடித்தனர்.

திருவாரூர் மாவட்ட அளவில் 10 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. அதன் விவரம் வருமாறு:-

துளசேந்திரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, கரையாங்காடு அரசு உயர்நிலைப்பள்ளி, எடகீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி, ஜாம்பாவனோடை வடகாடு அரசு உயர்நிலைப்பள்ளி, திருவீழிமழலை அரசு உயர்நிலைப்பள்ளி, பாலையக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, தொண்டியக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி, கட்டக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி, பூவனூர் அரசு உயர்நிலைப்பள்ளி, மாப்பிள்ளைகுப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய 10 அரசு பள்ளிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

No comments:

Post a Comment