Saturday 21 May 2016

4 தொகுதிகளில் நோட்டாவுக்கு 7,879 வாக்குகள்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு அடுத்த இடத்தில் நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருவாரூர் பேரவைத் தொகுதியில் திமுக தலைவர் மு. கருணாநிதி, அதிமுக சார்பில் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பி.எஸ். மாசிலாமணி உள்ளிட்ட 15 பேர், நன்னிலம் தொகுதியில் ஆர். காமராஜ் (அதிமுக ), எஸ்.எம்.பி. துரைவேலன்(காங்), ஜி. சுந்தரமூர்த்தி (மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட 14 பேர்.
திருத்துறைத்துறைப்பூண்டி தொகுதியில் ஆடலரசன் (திமுக ),
உமாமகேஸ்வரி (அதிமுக), கே. உலகநாதன்(இந்திய கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட 11 பேர், மன்னார்குடியில் எஸ். காமராஜ் (அதிமுக),
டி.ஆர்.பி.ராஜா( திமுக ), சிவக்குமார்( பாஜ), முருகையன்பாபு( தேமுதிக ) உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 52 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு அடுத்த நிலையில் நோட்டாவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருவாரூர் தொகுயில் 2,177, நன்னிலத்தில் 2,166, திருத்துறைப்பூண்டியில் 1,762, மன்னார்குடியில் 1,774 என மொத்தம் 7,879 வாக்குகள் நோட்டாவில் பதிவாகியுள்ளன. தபால் வாக்குகளில் மட்டும் 38 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்துள்ளன. 4 தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளர்களைப் பின்னுக்கு தள்ளி நோட்டா சிறப்பிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment