Thursday 2 April 2015

சார்பு ஆய்வாளர்தேர்வு (SI): இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள சார்பு ஆய்வாளர் பணிக்கான தேர்வுக்கு இலவச பயிற்சி விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சீருடை தேர்வு வாரியத்தால் சார்பு ஆய்வாளாó பணிக்கான தேர்வு 2015 மே 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வு பயிலும் மையம் மூலம் வழங்கப்படுகிறது. இதில் சேர விரும்புவோர் விருப்பக் கடிதத்தை இத்தேர்வுக்கு விண்ணப்பம் செய்த ஆதார நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment