Monday 15 August 2016

BSNL லேண்ட்லைன் அனைத்து அழைப்புகளையும் இலவசமாக அழைக்கலாம்

சுதந்திர தின சிறப்பு சலுகையாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தரைவழி இணைப்புகளில் (லேண்ட்லைன்) இருந்து அனைத்து அழைப்புகளையும் திங்கள்கிழமை (ஆக.15) இலவசமாக மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பிஎஸ்என்எல் தரைவழி இணைப்பில் இருந்து, எந்த நிறுவனத்தின் செல்லிடப் பேசி, மற்றும் தரைவழி இணைப்புகளுக்கு திங்கள்கிழமை இலவசமாக எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி இலவசமாக அழைக்கலாம்.
ஞாயிறுதோறும் இலவசம்: இதே வசதியை ஞாயிற்றுக்கிழமை தோறும் பெறலாம் என்று மனோஜ் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பிஎஸ்என்எல் தலைமை மேலாண் இயக்குநர் அனுபம் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், "அனைத்து பிஎஸ்என்எல் இணைப்புகளுக்கும் இந்த இலவச அழைப்பு வசதி பொருந்தும்; இதுதவிர, இரவு நேரத்தில் தரைவழி இணைப்பில் இருந்து இலவசமாக அழைப்புகளும் மேற்கொள்ளும் வசதியும் தொடர்ந்து அமல்படுத்தப்படும்' என்றார்.

No comments:

Post a Comment