Friday 19 August 2016

ஒட்டகம் வெட்டத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008-ஆம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு- தர நிர்ணய சட்டத்தின்படி, இறைச்சிக்காக வெட்டப்படும் விலங்குகளின் பெயர் பட்டியலில் ஒட்டகத்தின் பெயர் இல்லை. இருப்பினும், பக்ரீத் பண்டிகைக்காக தமிழகத்துக்கு கொண்டுவந்து ஒட்டகங்கள் வெட்டப்படுவது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின்படியும், மத்திய அரசு சட்டத்தின்படியும் குற்றம் என்பதால், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் பிறப்பித்த உத்தரவு:-
ஆடுகளை வெட்டுவது போல ஒட்டகங்களுக்கும் பிரத்யேக அறுவைக் கூடங்கள் இருந்தால் மட்டுமே அதை அனுமதிக்க முடியும். தமிழகத்தில் ஒட்டகங்களை வெட்டுவதற்கென தனியாக அறுவைக்கூடங்கள் இல்லாததால், வெட்ட அனுமதிக்க முடியாது.
இந்த வழக்கில் மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் என அனைவரும் தங்களது வாத, பிரதிவாதங்களை 3 பக்கத்திற்கு மிகாமல் அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையடுத்து, வழக்கின் விசாரணை அக்டோபர் 17-க்கு தள்ளிவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment