Wednesday 17 August 2016

"அரசின் நலத் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும்'

அரசின் நலத்திட்டங்களை அறிந்து பொதுமக்கள் பயன்பெற வேண்டுமென்றார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
திருவாரூர் அருகே பெருங்குடி ஊராட்சியில் திங்கள்கிழமை சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் மேலும் அவர் பேசியது:
ஊராட்சிகளில் வெளிப்படையான நிர்வாகம் நடைபெற வழிவகை செய்வதற்காகத்தான் இன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
ஜனநாயகத்தின் முக்கிய பங்கு கிராமசபை. ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு பெண் கல்வி அவசியம். ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்துக்கும் பெண் கல்வி இன்றியமையாதது.
எனவே நாம் அனைவரும் பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். அனைவரும் வீடுகளிலும், பொது இடங்களிலும் நீர் தேங்காதவாறு, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் வராமல் தடுக்க வேண்டுமென்றார் ஆட்சியர்.
கூட்டத்தில், கோட்டாச்சியர் இரா.முத்துமீனாட்சி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ். ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment