Sunday 21 August 2016

ஆக.24-இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆக.24-ஆம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் எரிவாயு இணைப்புகள் பெறுவதில் நுகர்வோருக்கு சேவை ஆற்றுவதற்கான ஆலோசனைகள் பற்றி விவாதிப்பது மற்றும் காஸ் சிலிண்டர் பெறுவதில் உள்ள இடர்பாடுகளைக் களைவது மற்றும் நுகர்வோர்களின் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு காஸ் சிலிண்டர் விநியோகத்தை சீர்படுத்துவது குறித்து ஆக.24-ஆம் தேதி, மாலை 4 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என்றார்.

No comments:

Post a Comment