Saturday 20 August 2016

ஒலிம்பிக் பாட்மிண்டன்: பி.வி.சிந்துவுக்கு வெள்ளி

ரியோ ஒலிம்பிக் மகளிர் பாட்மிண்டன் அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார். அரையிறுதிப் போட்டியில் நொஸோமி ஒகுஹாராவை 21-19, 21-10 என்ற நேர் செட்களில் அபாரமாக ஆடி வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார் பி.வி.சிந்து.
இதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளி உறுதியாகியுள்ளது. தங்கப்பதக்க போட்டியில் உலகின் முதல் நம்பர் வீராங்கனை கரோலினா மாரினைச் சந்திக்கிறார் சிந்து.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 10-ம் நிலை வீராங்கனை இந்தியாவின் பி.வி.சிந்துவும், தரவரிசையில் முதலிடம் வகிக்கும் கரோலினா மரினும் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப் போட்டி முதல் செட்டை பிவி சிந்து 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
2-வது செட்டில் சிந்து சிறிது தடுமாறினார். முதலிலிருந்தே புள்ளிகளைக் குவித்த மரின், இறுதியில் 21-12 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றி சம நிலைக்குக் கொண்டு சென்றார். தற்போது வெற்றியை நிர்ணயிக்கும் 3வது செட் தொடங்கியுள்ளது.
மூன்றாவது சுற்றிலும் மரினின் கை ஓங்கியது. இருவரும் சரிசமமாக மாறி மாறி புள்ளிகளைக் குவித்தனர். என்றாலும் மரினின் கையே ஓங்கியது. கடைசியில் 21-15 என்ற கணக்கில் மரினிடம் போராடி தோற்றார் சிந்து.

No comments:

Post a Comment