Tuesday 16 August 2016

திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூ.69.62 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 70-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தேசியக்கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சமாதானத்தைக் குறிக்கும் வகையில் வெண்புறாக்களை பறக்கவிட்ட ஆட்சியர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் 11 பேரை கௌரவித்தார். மேலும், சிறப்பாக பணியாற்றிய 22 காவல் துறை அலுவலர்கள் மற்றும் 86 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
விழாவில் புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் 55 பேருக்கு ரூ.62.90 லட்சம் மதிப்பிலான காசோலைகள், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் பிளஸ்-2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற இருவருக்கு ரூ.8,000 மதிப்பிலான காசோலை என 116 பயனாளிகளுக்கு ரூ.69.62 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடமும், வேப்பந்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இரண்டாமிடமும், மணவாள நல்லூர் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடமும், முத்துப்பேட்டை கே.ஏ.பி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி நான்காமிடமும், திருவாரூர் டிரினிட்டி பள்ளி 5-ஆவது இடமும் பிடித்தன.விழாவில், மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.சிவஞானம், குற்றவியல் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் த.மோகன்ராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தரசு, நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம், கோட்டாட்சியர்கள் இரா.முத்துமீனாட்சி (திருவாரூர்), செல்வசுரபி
( மன்னார்குடி) மற்றும் அலுவலர்கள், மாணவ, மாணவிகள்,  பொதுமக்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment