Thursday 18 August 2016

இந்தியாவுக்கு முதல் பதக்கம்; மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்றார் சாக்ஷி

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது.

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை ‛பிரீ ஸ்டைல்' பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதலில் 0-5 என பின் தங்கியிருந்த சாக்ஷி கடைசி நிமிடத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு அடுத்தடுத்து புள்ளிகள் பெற்றார். முடிவில் 8-5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற சாக்ஷி வெண்கலப் பதக்கம் வென்றார். இது ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம்.
முன்னதாக காலிறுதியில் ரஷ்ய வீராங்கனை விளிரியா கொலாகோவா உடன் நடந்த போட்டியில் தோல்வியடைந்ததால் ரெபிசாஜ் சுற்றில் விளையாடிய சாக்ஷி மாலிக், அச்சுற்றில் மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ்ஜை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றார். இந்தியா சார்பில் மல்யுத்த போட்டியில் பதக்கம் பெற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் சாக்ஷி.
மக்களை மதிக்கிறேன்:

தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்த சாக்ஷி கூறியதாவது: என் மீது அன்பும், நம்பிக்கையும் வைத்த நாட்டு மக்களை மதிக்கிறேன். அனைவருக்கும் இந்தருணத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment