Wednesday 10 August 2016

திருவாரூர் திருவிக கல்லூரி ஆக.12-ஆம் தேதி திறக்கப்படும்

திருவாருரில் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக திங்கள்கிழமை கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதிப்  பேச்சுவார்த்தையில் கல்லூரி ஆக.12-ஆம் தேதி திறப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 இந்த மோதல் தொடர்பாக திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோட்டாட்சியர் இரா. முத்துமீனாட்சி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை
நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசுக் கல்லூரிகளின் தஞ்சை மண்டல இணை இயக்குனர் பியாட்ரி ஸ்மார்க்ரெட், கல்லூரி முதல்வர் பொறுப்பு வகிக்கும் சிவராமன் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான பேராசிரியர்கள் ராமு, சண்முகசுந்தரம் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
 கூட்டத்தில் ஆக. 12-ஆம் தேதி கல்லூரி மீண்டும் திறப்பதென்றும் அன்று முதல் இருதரப்பினரும் சமாதானத்தில் செல்ல வேண்டுமென்றும், மீண்டும் பிரச்னையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்வதென்றும் இருதரப்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த 15 நாள்கள் கழித்து மீண்டும் ஒரு அமைதி பேச்சுவார்த்தையை  நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment