Tuesday 9 June 2015

தடை செய்யப்பட்ட மேகி நூடுல்ஸ் விற்பனை நடக்கிறதா? திருவாரூரில் அதிகாரிகள் ஆய்வு

















தடை செய்யப்பட்ட மேகி நூடுல்ஸ் விற்பனை நடக்கிறதா? என்பது பற்றி திருவாரூரில் உணவு பாதுகாப்பு அதி காரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேகி நூடுல்சுக்கு தடை

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்சில் காரியம், சுவையை கூட்டக்கூடிய மோனோ சோடியம், குளுட் டோமேட் உள்ளிட்ட ரசாயன பொருட்கள் அனுமதிக்கப் பட்ட அளவை விட அதிகமாக இருப்பதாகவும், இந்த நூடுல்சை சாப்பிட்டால் உடல் நலன் பாதிக்கப்படும் என்றும் அகில இந்திய அள வில் புகார்கள் எழுந்தன. இதையடுத்து பல்வேறு மாநில அரசுகள் மேகி நூடுல்சை விற்பதற்கு தடை விதித்தன.

தமிழக அரசும் ஆய்வு செய்து மேகி நூடுல்ஸ் விற் பனைக்கு தடை விதித்து உத் தரவிட்டது. இதையடுத்து திருவாரூர் மாவட்ட பகுதி களில் தடை செய்யப்பட்ட மேகி நூடுல்ஸ் விற்பனை நடக்கிறதா? என்பது பற்றி ஆய்வு செய்ய கலெக்டர் மதி வாணன் உத்தரவிட்டார். இதன்படி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அதி காரி ரமேஷ்பாபு தலைமை யில் உணவு பாதுகாப்பு அலு வலர்கள் பாலுசாமி, அன்பழ கன், எழில் ஆகியோர் திரு வாரூர் பகுதியில் உள்ள கடை களில் ஆய்வு செய்தனர்.

கடைகளில் ஆய்வு

ஆய்வின்போது கடைகளில் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டு இருந்த மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மொத்த விற்பனையாளருக்கு உடனே திருப்பி அனுப்பிவைக் கும்படி அதிகாரிகள் அறிவுறுத் தினர். இதையடுத்து மொத்த விற்பனை குடோனிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்கு நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மேகி நூடுல்ஸ் அட்டை பெட்டி களில் “விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களை அதிகாரி கள் ஒட்டினர்.

ஆய்வு குறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அதிகாரி ரமேஷ்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித் தார்.

அப்போது அவர் கூறியதா வது:-

திரும்ப ஒப்படைப்பு

ரசாயன பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் இருந்ததை அடுத்து நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்சை கடைகளில் விற் பனை செய்ய அரசு தடை விதித்தது. அரசின் உத்தர வின் படி திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் உள்ள கடைகளில் மேகி நூடுல்சை விற்கிறார்களா? என்பது பற்றி ஆய்வு நடத்தி வருகிறோம். அப்போது விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள மேகி நூடுல்ஸ் பாக்கெட்டு களை உடனே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மொத்தவிற்பனை ஏஜெண்டுகளிடம் திரும்ப ஒப்படைக்கும்படி கடைக்காரர்களிடம் வலியு றுத்தி வருகிறோம்.

ரூ.2 லட்சத்து 87 ஆயிரம்

திருவாரூரில் உள்ள மொத்த விற்பனை குடோனில் ஆய்வு நடத்தியபோது அங்கு ரூ.2 லட்சத்து 87 ஆயிரம் மதிப் புடைய மேகி நூடுல்ஸ் பாக் கெட்டுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின் றன. இவ்வாறு திருப்பி அனுப் பப்படும்போது நூடுல்ஸ் பாக்கெட்டுகள் வைக்கப்பட் டுள்ள அட்டை பெட்டியில் “விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களை ஒட்டி அனுப்பி வைத்து வருகிறோம்.

திருவாரூர் பகுதி கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மேகி நூடுல்சின் மதிப்பு ரூ.1 லட் சத்து 50 ஆகும். இவற்றை உடனே திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளோம். தடை செய்யப் பட்ட மேகி நூடுல்ஸ் விற்பனையை தடுக்க உணவு பாது காப்பு அலுவலர்கள் திரு வாரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment