Thursday 25 June 2015

உதவித்தொகை: சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிறுபான்மையின மாணவர்கள் 2015-16ஆம் கல்வியாண்டுக்கு கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருவாரூர் ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகாõக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பிளஸ் 2, ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், பட்டயப் படிப்புகள், இளநிலை (ம) முதுநிலை பட்டப்படிப்புகள் எம்பில், ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் கிறிஸ்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பயனாளி கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து இணைப்புகளை அப்லோடு செய்து மாணவர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து, அனைத்து சான்றின் நகல்களுடன் இருப்பிட முகவரி, வங்கி கணக்கு எண் விவரங்களுக்கான ஆவணங்களை இணைத்து படிக்கும் கல்வி நிலையங்களில் செப். 15ஆம் தேதிக்குள் புதியதுக்கும், அக்.10ஆம் தேதிக்குள் புதுப்பித்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை கல்வி நிலையங்கள் பரிசீலித்து தகுதியான விண்ணப்பங்களை அக். 5ஆம் தேதிக்குள் புதியதுக்கும், அக்.31-ம் தேதிக்குள் புதுப்பித்தலுக்கும் ஆன்லைன் மூலம் அனுப்பவேண்டும்

No comments:

Post a Comment