Monday 15 June 2015

மலேசியாவில் ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்படும் ஒடிஸா தொழிலாளர்கள்


ஒடிஸாவின் கஞ்சாம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 தொழிலாளர்கள், மலேசியாவில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் ஊதியம் வழங்கப்படாமல் பல மாதங்களாக அல்லல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 கஞ்சாம் மாவட்டத்தின் பத்ராபூர் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி உள்ளுரைச் சேர்ந்த 32 பேரை கடந்த ஆண்டு அழைத்துச் சென்றுள்ளார். 
 அவர்களிடமிருந்து, பயணச் செலவுக்காக தலா ரூ. 70,000 வசூல் செய்யப்பட்டுள்ளது.
 இந்நிலையில் மலேசியாவுக்குச் சென்ற 3 பேர், தங்களுடைய சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள், மலேசியாவில் அனுபவித்த துயரங்களை தங்களுடைய குடும்பத்தாரிடம் பகிர்ந்து கொண்டனர்.
 அங்கு பல மாதங்களாக ஊதியமில்லாமல் பணிபுரிந்ததாகவும், உரிய மருத்துவ சிகிச்சை தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், தங்களுடன் வந்தவர்களில் ஒருவர் மலேசியாவிலேயே இறந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 
 அதையடுத்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தார் மாவட்டத் தொழிலாளர் நல அதிகாரியிடம் முறையிட்டனர்.
 இதுகுறித்து மாவட்ட தொழிலாளர் நல அதிகாரி கல்பனா மிஸ்ரா கூறியதாவது:
 அந்தத் தொழிலாளர்கள், முறையான வழியில் வெளிநாட்டுக்குச் செல்லவில்லை. எனினும், இதுகுறித்து விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார் அவர்.
 இப்பிரச்னை தொடர்பாக கஞ்சாம் மாவட்ட ஆட்சியர் பி.சி.செüத்ரி கூறுகையில், "பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், நாடு திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றா

No comments:

Post a Comment