Sunday 23 November 2014

திருவாரூரில் குழந்தைகள் தின விழா


  திருவாரூர் கொடிக்கால்பாளையம் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கப்படுகிறது. திருவாரூர் கொடிக்கால் பாளையத்தில் செயல்பட்டு வரும் மத்லபுல் ஹைராத் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் வெள்ளிக்கிழமை குழந்தைகள் தின விழா நடைபெற்றது. விழாவில், ஈரோடு தேசியக் கல்வி மேம்பாட்டு மையம் சார்பில் நடத்திய குழந்தைகள் தின இலக்கியப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பல்வேறு போட்டியில் பங்கேற்ற 146 மாணவர்களில் 20 மாணவர்கள் முதலிடம் பரிசு பெற்றதாக தேர்ந்தெடுக்கப்பட் டு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளிச் செயலர் ஹாஜி முஹமது ஆதம் தலைமையில் நடை பெற்ற விழாவில் பொருளர் எம். முகமது அப்துல்காதர் மற்றும் எம். ஹிதாயத்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment