Tuesday 11 November 2014

புது பாஸ்போர்ட்டுக்கு ஆதார் அவசியம்: மத்திய வௌியுறவுத்துறை முடிவு




புதிய பாஸ்போர்ட்டுகள் வழங்க, ஆதார் அட்டையை அடையாளமாக பயன்படுத்த மத்திய அரசின் வௌியுறவுத்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம், புதிய பாஸ்போர்ட் எடுக்க விரும்புபவர்களுக்கு ஆதார் கட்டாயமாகிறது.
தற்போதைய நடைமுறையின்படி, புதிய பாஸ்போர்ட் பெற குடும்ப அட்டை, இருப்பிட சான்றிதழ், போலீஸ் வெரிபிகேஷன் ஆகியவை அவசியமாக உள்ளது. இந்த நடைமுறையின் கீழ், விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட்டை பெற கால தாமதமாவதாகவும், குறிப்பாக, போலீஸ் வெரிபிகேஷனுக்காக விண்ணப்பதாரர்கள் பல நாட்கள் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது என்றும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, பாஸ்போர்ட் மற்றும் விசா வழங்கும் நடைமுறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
ஆதார் அட்டை அவசியம்:

புதிய பாஸ்போர்ட் வழங்குவதற்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் எந்த ஒரு சலுகை அல்லது சேவையை பெறவோ, ஆதார் அட்டையை கட்டாயமாக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட் கூறி உள்ள நிலையிலும், பாஸ்போர்ட் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பாஸ்போர்ட் வழங்குவதற்கான புதிய நடைமுறை குறித்து உள்துறை, சட்டத்துறை ஆகியவற்றின் கருத்து கேட்கப்பட்டு, பின்னர் பிரதமர் மோடியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆதார் அட்டை அவசியம் என்ற நிலையில், அது இல்லாதவர்கள், அது குறித்த தங்களின் பதிவு செய்த எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும் என்று சலுகை காட்டப்பட்டுள்ளது. 
விரைவான சேவை:

தற்போதைய நடைமுறையில், பாஸ்போர்ட் கோரும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், அது குறித்த அறிக்கை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு கொடுக்கப்படும், இந்த அறிக்கை கிடைத்த ஒருவாரத்திற்குள் விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும். புதிய நடைமுறையின் கீழ், ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள முகவரி மட்டும், போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கிடையில், விண்ணப்பதாரர்களின் உறுதியளிப்பின் அடிப்படையில், பாஸ்போர்ட் உடனடியாக அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் வௌிநாடு பயணம் மேற்கொள்வதற்குள், போலீஸ் வெரிபிகேஷன் முடிக்கப்படும். ஒருவேளை, விண்ணப்பதாரர் குற்றச் செயலில் ஈடுபட்டிருந்தாலோ, தவறான தகவலை கொடுத்திருந்தாலோ, பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும்.

No comments:

Post a Comment