Wednesday 15 October 2014

வாக்காளர் பட்டியல் வெளியீடு


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் புதன்கிழமை (அக். 15) வெளியிடப்படவுள்ளது என
மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்திலுள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட அனைத்து வட்டாட்சியர், நகராட்சி
அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் திருவாரூர், மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகங்களில் புதன்கிழமை முதல் பொதுமக்கள் பார்வைக்கு வாக்காளர்
பட்டியல் வைக்கப்படுகிறது. தவிர, அக். 17, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்திலும் வாக்காளர் பட்டியல் வைக்கப்படுகிறது.

www.election.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் வாக்காளர் பட்டியலை காணலாம். எனவே, பொதுமக்கள் தங்களுடைய பெயர் வாக்காளார் பட்டியலில்
இடம்பெற்றுள்ளதா என்பதை வாக்காளர் வரைவுப் பட்டியலை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
அக்டோபர் 15-ம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ள இந்திய தேர்தல்
ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் 1.1.2015 அன்று தகுதியடைந்து, வாக்காளர் பட்டியலில் பெயார் இடம்பெறாத 18 வயது
நிறைவடைந்தவார்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க அக். 15 முதல் நவ. 10-ம் தேதி வரை தொடர்புடைய வாக்குச்சாவடிகளில் விண்ணப்பிக்கலாம்.
புதிதாக பெயர் சேர்ப்பவர்கள் படிவம் 6-ஐ மார்பளவு புகைப்படம், இருப்பிட முகவரி, வயது ஆகியவற்றுக்கான ஆதாரத்துடன் இணைத்து கொடுக்க வேண்டும். வாக்காளார்
பட்டியலில் உள்ள பெயரை நீக்க படிவம்-7, திருத்தங்கள் மேற்கொள்ள படிவம் -8 மற்றும் ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குள் இடம் மாறியிருந்தால் படிவம் 8 ஆகியவற்றை
நிறைவு செய்துகொடுத்து பயன்பெறலாம். நவ. 10-ம் தேதி வரை சேர்க்கப்படும் 18 வயது நிரம்பியவர்களுக்கு 25.1.2015 அன்று நடைபெறவுள்ள தேசிய வாக்காளர் தினத்தில்
வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

No comments:

Post a Comment