Tuesday 28 October 2014

இந்தியவும், ஜப்பானும் நட்புறவில் வழுவாக உள்ளது: கோஜி சுகியாமா


இந்தியாவும், ஜப்பானும் நட்புறவில் வழுவாக உள்ளது என்றார் சென்னையிலுள்ள ஜப்பான் தூதரக துணை தூதர் கோஜி சுகியாமா.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடியில் பத்மா நரசிம்மன் தொழிற் பள்ளி செயல்பட்டு வருகிறது. இத்தொழிற் பயிற்சி பள்ளி நிலையத்துக்கு ஜப்பான் நாட்டு மக்கள் மற்றும் ஜப்பான் அரசு சார்பில் ரூ. 65 லட்சம் வழங்கப்பட்டு, புதியக் கட்டடம் கட்ட ப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை புதியக் கட்டடத்தை திறந்து வைத்து மேலும் அவர் பேசியதாவது:
சென்னையிலுள்ள ஜப்பான் துணைத்தூதரகம் மூலம் 1990 முதல் 2014 வரை தென்னிந்தி யாவில் 117 நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. ஆண்டுக்கு சுமார் 4 நிறுவனங் களுக்கு நிதியுதவி செய்யப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் செயல்படும் சுவாமி தயானந்த சரஸ்வதி கல்விச் சங் கம் மூலம் ஆண்டுதோறும் 100 ஏழை, எளிய மாணவர்கள் குளிர்சாதன மெக்கானிக், வீட்டு உபயோகப் பொருள்கள் பழுதுபார்த்தல், வீடுகளில் வயரிங் மற்றும் பிளம்பிங் பணி செய்ய தகுதி பெறுவர். இதன் மூலம் சிறந்த வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி அவர்களது சமூகப் பொருளாதார நிலையை வலுப்படுத்த முடியும்.
ஜப்பானும், இந்தியாவும் நீண்ட நாள்களாக நட்புறவைக் கொண்டுள்ளது. கடந்த ஜனவரியில் ஜப்பான் பிரதமர் அபே இந்திய குடியரசுத் தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இ ந்தியா வந்து சென்றார். அதேபோல் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கடந்த செப்டம்பர் மா தம் ஜப்பான் சென்றார். இதன்மூலம் இருநாட்டு நட்புறவு உறுதியாகவுள்ளது என்பது அனை வருக்கும் தெரிந்ததே.
இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்த உயர்மட்ட அரசியல் ஒத்துழைப்பு எப்படி முக்கியமான தோ அதேபோல் அடிமட்ட ஒத்துழைப்பும் மிக அவசியம். மாணவர்கள் பள்ளியை மிகவும் சுத்தமாக வைத்துக்கொண்டு நன்கு பராமரித்து நீண்ட காலம் பயன்படும்படி பார்த்துக்கொள் ள வேண்டும். என்றாவது ஒரு நாள் இப்பள்ளியில் படித்த மாணவர்கள் நம் இரு நாடுகளுக் கும் இடையே நட்புக்கு பாலமாக இருப்பார்கள் என நம்புகிறேன் என்றார் கோஜிசுகியாமா.
விழாவில், சுவாமி தயானந்தா சரஸ்வதி கல்விக்குழுத் தலைவர் டி.டி. ஜெகன்நாதன் உள் ளிட்டோர் பங்கேற்றனர். கல்விக்குழுச் செயலர் டாக்டர் சாந்தி ரெங்கநாதன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் க. பாஸ்கர் நன்றி கூறினார். கல்விக்குழு உறுப்பினர் ராதிகா சீனிவாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment