Friday 17 October 2014

திருவாரூரில் 5-வது நாளாக தொடர்ந்து மழை

திருவாரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை (அக்டோபர் 13) ம் தேதி தொடங்கி மழை வெள்ளிக்கிழமை 5-வது நாள்களாக நீடித்தது.

ஹுட்ஹுட் புயலால் ஆந்திரம் மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த புயலின் தாக்கம் தமிழ்நாட்டிலும் இருந்தது. கடந்த திங்கள்கிழமை முதல் தமிழகத்தில் பல இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழைப் பெய்து வருகிறது. இதே போல் திருவாரூர் மாவட்டத்திலும் திங்கள்கிழமை முதல் மழை பெய்து வருகிறது.

நாள்தோறும் மதியம் மற்றும் மாலை வேளைகளில் மழை பெய்து வந்தது. வெள்ளிக்கிழமை காலையில் மழைப் பெய்தது.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக திருத்துறைப்பூண்டியில் 11.8 மில்லி மீட்டர் மழைப் பதிவானது.

இதே போல் பிற இடங்களில் நீடாமங்கலம் - 10, மன்னார்குடி - 9.8, முத்துப் பேட்டை - 9.3, பாண்டவையாறு தலைப்பு - 2.8, திருவாரூர் - 1.8 என்ற அளவில் மழைப் பதிவானது. வெள்ளிக்கிழமை மாலையும் விட்டு விட்டு மழைத் தொடர்ந்து பெய்தது.

No comments:

Post a Comment