Sunday 19 October 2014

திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளத்தடுப்பு பணிகளை கண்காணிக்க குழு


திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை வெள்ளத் தடுப்புப் பணிகளை கண்காணிக்க வட்ட அளவில் துணை ஆட்சியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் எம். மதிவாணன்.
திருவாரூர், நன்னிலம், குடவாசல் ஆகியப் பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர் மேலும் கூறியது:

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் வெள்ளத்தை தடுக்கும் பணிகளை கண்காணிக்க கோட்ட மற்றும் வட்ட அளவில் துணை ஆட்சியாóகள் நியமிக்கபட்டுள்ளனாó. மன்னார்குடி கோட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன், திருவாரூர் கோட்டத்திற்கு தமிழ்நாடு நுகாóபொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அ. அழகிரிசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வட்ட அளவில், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் செல்வசுரபி, நீடாமங்கலம் சிறப்பு திட்டங்கள் தனி துணை ஆட்சியர் சதிதேவி, வலங்கைமான் மாவட்ட வழங்கல் அலுவலர் மனோகரன், குடவாசல் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஜயலெட்சுமி, நன்னிலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் எஸ். மாலா, திருத்துறைப்பூண்டி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் எஸ். அசோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அனைத்து வட்டாட்சியர்களும் தலைமையிடத்தில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தை கண்காணிக்க அந்தந்த வட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் மதிவாணன்.

No comments:

Post a Comment