Saturday 25 October 2014

பராமரிப்பு, பாதுகாப்பின்மையால் தொடர்ந்து இடிந்து வரும் கமலாலயக் குளக்கரை


 
 
திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலயக் குளக்கரை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறைவு காரணமாக குளக்கரைகள் தொடர்ந்து இடிந்து வருகிறது.
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் மேற்கு பகுதியில் வரலாற்று பெருமை கொண்ட கமலாயம் குளம் உள்ளது. கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்ற கருத்து உண்டு. குளத்தின் நடுவில் பழமையான நாகநாதசுவாமி கோயில் உ ள்ளது. குளத்தைச் சுற்றி சுமார் 20 அடி உயரத்துக்கு செங்கல் கட்டடம் கட்டப்பட்டு, அதன் மீது இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் நகருக்கு பிரதான சாலையாக கமலாலயக் குளக்கரை இருந்து வருவதால் காரைக்கால், மயிலாடுதுறை, கும்பகோணத்துக்கு போக்குவரத்து சாலையாக உள்ளது. பழங்கால கட்டடம் என்பதால் டன் கணக்கில் எடையுள்ள கனரக வாகனங்கள் செல்லும் போது குளக்கரை பாதிப்புக்குள்ளாகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த மழையில் குளக்கரை ஈரமாகி மண் தன்னுடைய கடினத் தன்மையை இழந்து இருந்தது. குளக்கரை அதிக பாரத்தை தாங் காது என்ற கருத்து நிலவிய போதும் அரசு நிர்வாகம் அவ்வழியே செல்லும் கனரக வாகனங்களின் இயக்கத்தை தடுக்கவில்லை.
இதனால் 2012 அக்.23-ம் தேதி குளத்தின் வடகரை முதலில் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கும், அடுத்து தொடர்ச்சியாக அக்.31-ம் தேதி மேலும் 100 அடி தூரத்துக்கு குளக்கரை இடிந்து விழுந்தது. குளக்கரை இடிந்து பின்பே அவ்வழியில் பேருந்து, கனரக போக்கு வரத்து நிறுத்தப்பட்டு கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டன.

கரை இடிந்து நாள்கள் கடந்ததே தவிர தியாகராஜர் கோயில் நிர்வாகமோ, மாவட்ட நி ர்வாகமோ கரையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளலாத நிலையில், பத்திரிகைகளும், பொதுநல அமைப்புகள் கரை சீரமைப்புக்காக குரலெழுப்பியது.

வரலாற்று சிறப்பு மிக்கது கமலாலயக் குளம் என்பதும், இக்கோயில் உலக பிரசித்திப் பெற்றதுஎன்பதும் அரசு நிர்வாகத்துக்கு தெரிந்தும் ஏனோ காரணத்தினால் கரை சீரமை ப்பு பணியை தொடங்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது.

பொது நல அமைப்புகளின் குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தால் மெல்ல மாவட்ட நிர்வாகம் கரை சீரமைப்பைத் தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு, முதலில் சுமார் ரூ. 53 லட்சமும் இது போதாதென்று பிறகு ரூ. 93 லட்சம் என நிதியை பெற்றது. கரை இடிந் து 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையிலும், பராமரிப்புக்கு நிதி பெற்று பல மாதங்க ள் கடந்தும் அண்மையில் தான் குளக்கரை சீரமைப்புப் பணித் தொடங்கின.

ஏற்கெனவே இடிந்து விழுந்த குளக்கரை சீரமைப்பு பணியே தற்போதுதான் தொடங்கியுள்ளது என்ற நிலையில், குளத்தின் மேற்கு பகுதியில் சனிக்கிழமை சுமார் 150 அடி நீளத்துக்கு கரை இடிந்து விழுந்தது. இதில் பாதிப்பு எதுவும் இல்லை.

கரை இடிந்தப் பகுதியில் இருந்த மின்கம்பமும் சாய்ந்து விழுந்தது. இதனால் மின்வ யர்கள் தரையில் கிடந்தது. திருவாரூர் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சனிக்கிழ மை மின்தடை செய்யப்பட்டிருந்ததால் மின்சாரத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மின்சாரம் இருந்திருந்தால் அதிகப் பாதிப்புகள் நிகழ்ந்திருக்கும். ஏனெனில் தற்போது குளத்தின் மேற்குகரை தான் பிரதான வழிச்சாலையாக உள்ளது.

தற்போது தொடர்ந்து மழைப் பெய்து வருவதால் குளத்தின் கரை வழுவிழந்துள்ளது. எனவே அவ்வழியாக பேருந்து, லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல சாலை தகுதி யானதா என்பதை ஆய்வு செய்து இயக்க வேண்டும். இல்லையென்றால் குளக்கரைக்கு ம் பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவது உறுதி. தொடர்புடைய நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் முறையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment