Monday 13 October 2014

சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினம் 13.10.14


திருவாரூர் ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது.
தீயணைப்பு துறை சார்பிலான இந்த நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். பேரிடர் காலங்களில் அதாவது, வெள்ளத்தில் சிக்கிக் கொண்டால், தீ விபத்து ஏற்பட்டால், மின்சாரம் தாக்கினால் அதிலிருந்து எப்படி தப்பிப்பது, மீட்பது, முன்னெச்சரிக்கை குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
ஆட்சியர் எம். மதிவாணன், கோட்டாட்சியர்கள் முத்துமீனாட்சி (திருவாரூர்), வே. சுப்பு (மன்னார்குடி), உதவி தீயணைப்பு அலுவலர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, திருவாரூர் ரயில் நிலையத்தில் பேரிடர் இன்னல்கள் குறைப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வேலுடையார் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். பேரணி பேருந்து நிலையம், பனகல் சாலை, தெற்குவீதி வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.




No comments:

Post a Comment