Monday 20 October 2014

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை: ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், அனைத்து விவசாய நிலங்கள், குளங்கள் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்தேங்கியுள்ளது. தொடர் மழையால் யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, கங்களாஞ்சேரி வெட்டாறில் மழைநீர் வடிவதை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மதிவாணன், மழையால் கரைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நன்னிலம் பேரூராட்சி பேரூந்து நிலையத்தில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து வெளியேற்ற பேரூராட்சி அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து கடகக்குடி, அதம்பார், அச்சுதமங்கலம் பகுதிகளில் ஆறு, குளம், வாய்க்கால், விளை நிலங்களில் மழை நீர் தேங்காதவாறும், பொதுமக்களுக்கு மழையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கைவுடன் செயல்பட வேண்டும் என வெüóளத் தடுப்பு கண்காணிப்பு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment